அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' |
"தமிழ் படம்" இயக்கி தமிழ் சினிமாவை கலாய்த்த சி.எஸ்.அமுதன் இயக்கும் ரெண்டாவது படத்தின் பெயரும் "ரெண்டாவது படம்"தான். விமல், ரம்யா நம்பீசன், ரிச்சர்ட், அரவிந்த் ஆகாஷ் நடிக்கிறார்கள். இதுவும் தமிழ் படம் போன்று கிண்டல் ஸ்பெஷல்தான் என்று கூறப்படுகிறது. ஆனால் இதனை சி.எஸ்.அமுதன் மறுக்கிறார். அவர் கூறியதாவது: மூன்று வருஷத்துக்கு முன்பு நான் சினிமாவுக்கு வருவேன் என்று நினைக்கவில்லை. ஆனால் வந்து விட்டேன். படம் இயக்குவது என்று முடிவ செய்தபிறகு இதுவரை யாரும் செய்யாததை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் உருவானதுதான் தமிழ்படம். பலரை அதில் கேலி செய்திருந்தாலும் எந்த ஹீரோவும், இயக்குனரும் என்னிடம் கோபப்படவில்லை. எல்லோரும் என்னுடைய நண்பர்களாக இருக்கிறார்கள். ரெண்டாவது படத்தில் யாரையும் கிண்டலோ கேலியே செய்யவில்லை. இதுவும் இதுவரை யாரும் தொடாத கதை. இப்படியும் காட்சிகள் அமைக்க முடியுமா என்று வியக்கும் அளவுக்கு காட்சிகளை அமைத்துள்ளேன். இந்தப் படம் யார் மனதையும் புண்படுத்தாது. அடிப்படையில் இது த்ரில்லர் படம். அதில் காமெடியையும் கலந்திருக்கிறேன்.