Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பண்ணைபுரம் முதல் பாராளுமன்றம் வரை “இசைஞானி” இளையராஜா.

02 ஜூன், 2023 - 10:05 IST
எழுத்தின் அளவு:
Happy-Birthday-to-Ilaiyaraaja

எண்ணிலடங்கா இசை எனும் இன்பத் தேனை தன்னகத்தே கொண்டிருக்கும் தனிப்பெரும் இசைக்கடல் “இசைஞானி” இளையராஜா அவர்களின் 80வது பிறந்த தினம் இன்று…

* 1943ஆம் ஆண்டு ஜுன் 2 அன்று, தமிழ்நாட்டில், தேனி மாவட்டத்திலுள்ள பண்ணைபுரம் என்ற சிறிய கிராமத்தில், டேனியல் ராமசாமி மற்றும் சின்னத்தாயி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.

* சினிமாவிற்கு வருவதற்கு முன் அண்ணன் பாவலர் வரதராஜன் அவர்களின் கச்சேரிகளில் ஆர்மோனியம் வாசிக்கும் திறமையை கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்துக் கொண்டிருந்தார் இளையராஜா.

* 1976ஆம் ஆண்டு தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் அவர்கள் மூலம், “அன்னக்கிளி” திரைப்படத்திற்கு இசை அமைக்கும் வாய்ப்பு கிடைத்து, இசையமைப்பாளராக தனது 33வது வயதில் அறிமுகமானார்.

* முதல் படமே வெள்ளிவிழா கண்டது. எம் ஜி ஆர், சிவாஜி போன்ற பெரிய நடிகர்களின் கலர் படங்களையே வென்ற பெருமை, இந்த கருப்பு வெள்ளை “அன்னக்கிளி”க்கு உண்டு என்றால், அதற்கு இளையராஜாவின் இசை மட்டுமே காரணம்.

* ஒரு பாடலை உருவாக்க வாரமோ அல்லது மாத கணக்கில் நேரமோ இளையராஜாவிற்கு தேவைப்பட்டதே இல்லை. “தென்றல் வந்து தீண்டும் போது” என்ற பாடலை உருவாக்க இசைஞானி எடுத்துக் கொண்டது வெறும் அரைமணி நேரம்தான்.

* இளையராஜா வெறும் அரைநாளில் மொத்த ரீரெக்கார்டிங்கையும் செய்து முடித்த திரைப்படம்தான் “நூறாவது நாள்”.

* எல்லோரும் இசையை வாசித்துதான் காட்டுவார்கள். ஆனால் இசைஞானி மட்டும்தான் இசையை 'பக்கா' நோட்ஸாக இசைக் கலைஞர்களுக்கு எழுதியே கொடுப்பவர்.

* “அமிர்தவர்ஷினி” என்ற, மழையை வரவழைப்பதற்கான தனித்துவமிக்க ராகத்தை, ஒரு கோடைப் பொழுதின் பிற்பகலில் “தூங்காத விழிகள் ரெண்டு” பாடலை அமைத்து மழையையும் வரவழைத்தவர் தான் இசைஞானி.

* “ரீதி கௌலை” என்ற ராகத்தை பயன்படுத்தி முதன் முதலில் மெட்டமைத்த பெருமையும் இசைஞானிக்கு உண்டு. படம் : “கவிக்குயில”. பாடல் : “சின்னக் கண்ணன் அழைக்கிறான”;.

* பெரும்பாலும் சோகப் பாடல்களை மட்டுமே சுமந்து வரும் “சுபபந்துவராளி” ராகத்தை பயன்படுத்தி, வித்தியாசமான, ஒரு துள்ளலான பாடலைத் தந்தவர்தான் இசைஞானி. பாடல் : “கண்டுபுடிச்சேன் கண்டுபுடிச்சேன். படம் : “குருசிஷ்யன்”.

* இசைஞானி விசிலில் ட்யூன் அமைத்து, அதை ஒலிநாடாவில் பதிவு செய்து பின்பு பாடகரை பாட வைத்து ஒலிப்பதிவு செய்த பாடல்தான் “காதலின் தீபம் ஒன்று” என்ற “தம்பிக்கு எந்த ஊரு” திரைப்படப்பாடல்.

* ஆசியாவிலேயே முதல் முறையாக “சிம்பொனி” இசை அமைத்தவர் இசைஞானி இளையராஜா. “சிம்பொனி” கம்போஸ் பண்ண குறைந்தது 6 மாதாமாவது ஆகும். வெறும் 13 நாளில் கம்போஸ் செய்து, மற்ற கம்போஸர்களை மிரளச் செய்தவர்தான் இசைஞானி இளையராஜா.

* “பருவமே புதிய பாடல் பாடு” என்ற “நெஞ்சத்தைக் கிள்ளாதே” படப் பாடலுக்கு தொடையில் தட்டி தாளத்திற்கு புதிய பரிமாணத்தை கொடுத்தவர்தான் இசைஞானி இளையராஜா.

* இசைஞானி இளையராஜா இசை வித்தகர் மட்டுமல்ல அற்புதமான கவிஞரும் கூட, காலத்தை வென்ற பல காவியப் பாடல்கள் இவரது கைவண்ணத்தில் வந்திருக்கின்றன.

* “தேசிய விருதுகள்”, “பத்ம விருதுகள்”, “தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள்”, “கலைமாமணி விருது”, “ஃபிலிம்ஃபேர் விருதுகள்”, “கேரள மாநில திரைப்பட விருதுகள்”, “சங்கீத நாடக அகாடமி விருது”, “முனைவர் பட்டம்” என விருதுகளும், பட்டங்களும் இவர் கைவசம் வந்து பெருமை அடைந்தன.

* இசைஞானி இளையராஜாவை கௌரவிக்கும் பொருட்டு, மத்திய அரசு இவருக்கு “ராஜ்ய சபா உறுப்பினர்” பதவியும் வழங்கி கௌரவித்தது.

* விண்ணவரும் வியக்கும் வண்ணம் நம் மண்ணின் இசையை ஓங்கி ஒலித்த இசைஞானியின் பிறந்த நாளான இன்று, அவரைப் பற்றிய ஒரு சில குறிப்புகளை பகிர்ந்து, இசையுடன் இசைந்து இன்னும் பல்லாண்டு வாழ இசைஞானியை வாழ்த்தி மகிழ்வோம்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
மாமன்னனே கடைசி : நல்ல படமாக அமைந்தது திருப்தி - உதயநிதிமாமன்னனே கடைசி : நல்ல படமாக அமைந்தது ... “பொன்னியின் செல்வன்” தந்த பொற்கால வெள்ளித்திரை இயக்குநர் மணிரத்னம் “பொன்னியின் செல்வன்” தந்த பொற்கால ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

g.s,rajan - chennai ,இந்தியா
02 ஜூன், 2023 - 22:08 Report Abuse
g.s,rajan Isai Gnani Ilaiyaraja is definitely a Musical Legend....
Rate this:
T.Senthilsigamani - Srivilliputtur,இந்தியா
02 ஜூன், 2023 - 17:32 Report Abuse
T.Senthilsigamani இசை யோகம் தந்த இசை ஞானி இளையராஜா அவர்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன். பக்தி யோகம் ஞான யோகம் கர்ம யோகம் ராஜ யோகம் போன்றதே ஆகும் இசை யோகம். பின்னிரவில் ஜன்னலோர சீட்டில் பாதி தூக்கத்தில் 82 m வருடத்திய இளையராஜா பாடல்களை கேட்டு கொண்டபடி பஸ்சில் பயணிக்கும் பயணியர் அனைவரும் _ சச்சிதானந்த பேரின்ப நிலையை பாமரனும் அடைந்திட செய்தவர் இளையராஜா அவர்கள்.
Rate this:
Pats, Kongunadu, Bharat, Hindustan - Coimbatore,இந்தியா
02 ஜூன், 2023 - 16:08 Report Abuse
Pats, Kongunadu, Bharat, Hindustan உண்மை. இளையராஜா இந்தியாவின் பெருமை. தமிழகத்தின் வரம். நமக்கு இசைமழை. இசைக்கு உரம்.
Rate this:
V GOPALAN - chennai,இந்தியா
02 ஜூன், 2023 - 12:00 Report Abuse
V GOPALAN But Our Kamalahasan was honoured by AR Rahman recently and that too in abroad
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in