Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'தி கேரளா ஸ்டோரி' திரையிட்ட தியேட்டர்களை மிரட்டிய தமிழக அரசு : தயாரிப்பாளர் குற்றச்சாட்டு

01 ஜூன், 2023 - 11:38 IST
எழுத்தின் அளவு:
Tamil-Nadu-government-threatened-theaters-that-screened-'The-Kerala-Story':-producer-accused

விபுல் ஷா தயாரிப்பில் இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கத்தில் கடந்த மே 5ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'தி கேரளா ஸ்டோரி'. அடா சர்மா, சித்தி இட்னானி உட்பட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். கேரளாவில் உள்ள அப்பாவி இந்து பெண்கள் மதம் மாற்றப்பட்டு முஸ்லிம் தீவிரவாத அமைப்புகளில் சேர்க்கப்படுவதாக இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டிருந்தது. தென்னிந்தியாவில் இந்த படம் நேரடியாகவும், மறைமுகமாகவும் தடுத்து நிறுத்தப்பட்டது. மேற்கு வங்க மாநிலம் நேரடியாக படத்திற்கு தடைவிதித்தது. இதையும் தாண்டி இப்படம் உலகம் முழுவதும் இதுவரை 200 கோடியை கடந்து வசூலித்துள்ளது.

இந்த நிலையில், தயாரிப்பாளர் விபுல் ஷா அளித்த பேட்டியில், தி கேரளா ஸ்டோரி படம் வெளியான தியேட்டர்களை தமிழக அரசு மிரட்டியதாக குற்றம்சாட்டி உள்ளார். அவர் மேலும் கூறியிருப்பதாவது: உச்சநீதிமன்றத்தின் உத்தரவை தமிழகம் மற்றும் மேற்கு வங்க மாநில அரசுகள் முற்றிலுமாக நிராகரித்துள்ளன. 'தி கேரளா ஸ்டோரி' படத்தை திரையிடக் கூடாது என திரையரங்க உரிமையாளர்கள் மிரட்டப்பட்டுள்ளனர். மீறி படத்தை வெளியிட்டால் திரையரங்க உரிமம் புதுப்பிக்கப்படாது என்றும் தாக்குதல் ஏதேனும் நடந்தால் பாதுகாப்பு கிடைக்காது என்றும் அவர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே யாரும் இப்படத்துக்காக ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை.

இந்த இரண்டு மாநில அரசுகளும் தான் ஜனநாயகம் நசுக்கப்படுவதாக எப்போதும் குற்றம்சாட்டி வந்துள்ளன. ஆனால் அவர்களே உச்சநீதிமன்ற உத்தரவை நிராகரித்து இப்படத்தை அனுமதிக்க மறுப்பது முரண். இந்த இரண்டு மாநில மக்களும், பாதிக்கப்பட்ட பெண்களுடன் நிற்கத் தயாராக இல்லாத அரசாங்கத்தை ஆதரிக்க வேண்டுமா என்று முடிவு செய்ய வேண்டும். உண்மையில் அவை இந்த பயங்கரவாத வலைப்பின்னலை அம்பலப்படுத்துவதை மூடி மறைக்க உதவுகின்றன.

இவ்வாறு விபு ஷா கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கதை நாயகியாக நடிக்கும் ரேகா20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கதை ... பிரபுதேவாவின் ‛பேட்ட ராப்' : நாயகியாகும் வேதிகா பிரபுதேவாவின் ‛பேட்ட ராப்' : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Subramaniyam N - Salem,இந்தியா
01 ஜூன், 2023 - 16:12 Report Abuse
Subramaniyam N Yes it is absolutely correct. Possibly the theatre owners might have been warned with grave consequences, if they screen the film. Very sad. These are the people who cry always that freedom of speech is in danger and always play minority appeasement politics to get votes.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in