தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
'கடலோர கவிதைகள்' படத்தின் மூலம் அறிமுகமானவர் ரேகா. அதன் பிறகு புன்னகை மன்னன், நம்ம ஊரு நல்ல ஊரு, சொல்வதெல்லாம் உண்மை, ஆண்களை நம்பாதே, எங்க ஊரு பாட்டுக்காரன், சின்னமணிக்குயிலே, செண்பகமே செண்பகமே, ராசாவே உன்னை நம்பி, என் பொம்முட்டி அம்மாவுக்கு உள்பட ஏராளமான படங்களில் நடித்தார். 1986ல் அறிமுகமான ரேகா, 2000மாவது ஆண்டில் இருந்து குணசித்ர நடிகையாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் 20 வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் கதையின் நாயகியாக நடிக்கிறார். 'மிரியம்மா' என்ற இந்த படத்தில் டைட்டில் ரோலான மிரியம்மாவாக நடிக்கிறார்.. அறிமுக இயக்குநர் மாலதி நாராயண் இயக்குகிறார். ரேகாவுடன் எழில் துரை, சினேகா குமார், அனிதா சம்பத், விஜே ஆஷிக், மாலதி நாராயண் ஆகியோர் நடிக்கிறார்கள். ஜேசன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, ஏ. ஆர். ரெஹைனா இசையமைக்கிறார். 72 பிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் இயக்குநரான மாலதி நாராயண் தயாரிக்கிறார். படத்தின் படப்பிடிப்புகள் பூஜையுடன் தொடங்கி நடந்து வருகிறது.