Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வடிவேலுவை இயக்குகிறார் கே.எஸ்.ரவிகுமார்..!

07 மார், 2013 - 11:03 IST
எழுத்தின் அளவு:

அரசியல் பிரச்சாரத்துக்குப்போன வடிவேலுவுக்கு சினிமாவில் விழுந்தது ஆப்பு. இரண்டு வருட வனவாசத்துக்குப் பிறகு மீண்டும் நடிக்க வாய்ப்புக்காக காத்திருக்கிறார். ஆனால் அவரை அழைத்து நடிக்க வைக்கத்தான் யாரும் தயாராக இல்லை. ஒன்றரை வருட இடைவெளியில் "மறுபடியும் ஒரு காதல்" என்ற ஒரு படம் மட்டுமே வெளிவந்தது. அந்தப் படத்துக்கு அரசோ, ஆளுங்கட்சியோ எந்த இடையூறும் செய்யவில்லை. இன்னும் சொல்லப்போனால் அரசும், ஆளும் கட்சியும் அவரை கைபிள்ளையாகத்தான் பார்க்கிறது. சீரியசாக கருதவில்லை. ஆனால் தயாரிப்பாளர்கள்தான் தயங்குகிறார்கள்.

இதற்கிடையில் வடிவேலு மீண்டும் ஹீரோவாக நடித்து தனது ரீ என்ட்ரி கணக்கை துவக்க நினைத்தார். பலரிடம் கதை கேட்டும் வருகிறார். வடிவேலுவை வசூல் மன்னனாக்கிய "இம்சை அரசன் 23ம் புலிகேசி"யை இயக்கிய சிம்புதேவன் தற்போது அதன் இரண்டாம் பாகத்தின் ஸ்கிரிப்டை தயார் செய்து விட்டார். அதில நடிக்க வடிவேலுவும் ஓகே செய்து விட்டார். ஆனால் படத்திற்கான பட்ஜெட் 30 கோடியாம். அதில் வடிவேலு சம்பளம் மட்டும் 5 கோடியாம். இவ்வளவு பெரிய தொகையை இப்போதுள்ள சூழ்நிலையில் வடிவேலுவை நம்பி எந்த தயாரிப்பாளரும் முதலீடு செய்யத் தயாராக இல்லை. அதனால் அந்த ப்ராஜக்ட்டும் கிடப்பில் கிடக்கிறது.

இதற்கிடையில் வடிவேலு தற்போது தன் மகள் திருமணத்துக்கான ஏற்பாட்டில் பிசியாக இருக்கிறார். திருமணத்துக்கு அத்தனை அரசியல் கட்சித் தலைவர்களையும் அழைத்து "நான் பொதுவான ஆள்" என்று காட்டிக் கொள்ள முடிவு செய்திருக்கிறார். தனது பரம எதிரியான விஜயகாந்தின் பக்கம் தி.மு.க நெருங்குவது அவரை கவலையில் ஆழ்த்தியுள்ளது. அதனால்தான் திருமணத்தை அனைத்துக் கட்சி விழாவாக நடத்த ஏற்பாடு செய்து வருகிறார்.

இந்த நிலையில் வடிவேலு ஹீரோவாக நடிக்கும் படத்தை கே.எஸ்.ரவிகுமார் இயக்குவது முடிவாகி உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினியின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய டாக்டர் காயத்திரியின் கதை "ஆப்பிரிக்காவில் வடிவேலு". இந்தக் கதையை அவர் கே.எஸ்.ரவிகுமாரிடமும், வடிவேலுவிடவும் கூறியிருக்கிறார். இருவருக்குமே கதை பிடித்துவிட்டதால் சேர்ந்து பணியாற்ற முடிவு செய்து விட்டார்கள். "காட் மஸ்ட் பி  கிரேஸி" பட டைப்பிலான கதை. ஆப்பரிக்கா காட்டில் தன்னந்தனியாக மாட்டிக் கொள்ளும் வடிவேலு அங்கு படும் சிக்கல்களும், சிரமங்களும்தான் கதை.

இதுகுறித்து இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் கூறியிருப்பதாவது: கோச்சடையானில் எனது பணி முடிந்து விட்டது. கோச்சடையான் ரிலீசுக்கு பிறகு ராணா பணிகள் தொடங்கலாம் என்று ரஜினி சார் கூறியிருக்கிறார். பஞ்சதந்திரம் பார்ட்-2 பண்ணலாம் என்கிற யோசனையும் உண்டு. இதற்கிடையில்தான் டாக்டர் காயத்திரி, வடிவேலுக்கு ஒரு கதை எழுதியிருக்கேன்னு சொன்னாங்க. அந்த கதை எனக்கு ரொம்ப புடிச்சிருந்தது. வடிவேலுவும் கதையை கேட்டுவிட்டு வந்து "பண்ணாலாமா?"ன்னு கேட்டார். சரி என்று சொல்லிவிட்டேன். இது ஒரு பிரமாண்டமான படமாக இருக்கும். தயாரிப்பாளர் கிடைத்ததும் ஆரம்பித்து விடுவோம். என்றார்.

ஏஜிஎஸ் எண்டர்டயிண்மெண்ட் கல்பாத்தி அகோரம், ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன், அல்லது ஈராஸ் நிறுவனம் தயாரிக்காலம் என்று கூறப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

08 மார், 2013 - 04:46 Report Abuse
சொல்லுங்கண்ணே சொல்லுங்க எவ்வளவு மன சுமைகளாக இருந்தாலும் மன அழுத்தத்தில் இருந்தாலும் கொஞ்ச நேரம் உங்க காமெடியை பார்த்தால் எல்லாம் பறந்து விடுகிறது. மீண்டும் வடிவேலு என்ற பெயரை சூட்டி மீண்ட வடிவேலு என்று உலா வாருங்கள். ரசிக்க காத்திருக்கிறோம்.
Rate this:
sathiyan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
08 மார், 2013 - 03:01 Report Abuse
sathiyan சின்னஞ்சிறு நண்டு சிண்டுல இருந்து பல்லுபோன கிழடுகளுக்கும் பிடித்துப்போன நகைச்சுவை நடிகன் வடிவேளுதன்யா...வாங்க வைகை புயல். நீங்க இல்லாம தமிழ் திரை உலகம் கோமா நிலைமைக்கு போயிருச்சு...வாங்க வந்து புத்துயிர் குடுங்க...
Rate this:
arun - coimbatore,இந்தியா
07 மார், 2013 - 17:30 Report Abuse
arun நீங்க நீங்கதான் ......
Rate this:
அரசன் - madurai  ( Posted via: Dinamalar Android App )
07 மார், 2013 - 17:24 Report Abuse
அரசன் நல்ல நகைச்சுவை நடிகர்..அவனவன் நினைப்பே நல்லதுக்கும் கெட்டதுக்கும் காரணம்..இனிமேலாவது தொழில மட்டும் பார்த்துட்டு நல்லா இருக்கட்டும்..
Rate this:
Arumugam - Paris,பிரான்ஸ்
07 மார், 2013 - 16:57 Report Abuse
Arumugam வடிவேலு மிகச்சிறந்த காமடி நடிகர்.
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in