நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! | ஓடிடியிலும் சாதனை படைக்கும் 'ஹனுமான்' | 'ஆடு' படத்தின் மூன்றாம் பாகம் அறிவிப்பு | அனுபம் கெர் படத்திற்கு இசையமைக்கும் மரகதமணி | சூர்யாவின் 'புறநானூறு' தள்ளிப் போகிறதா? |
அரசியல் பிரச்சாரத்துக்குப்போன வடிவேலுவுக்கு சினிமாவில் விழுந்தது ஆப்பு. இரண்டு வருட வனவாசத்துக்குப் பிறகு மீண்டும் நடிக்க வாய்ப்புக்காக காத்திருக்கிறார். ஆனால் அவரை அழைத்து நடிக்க வைக்கத்தான் யாரும் தயாராக இல்லை. ஒன்றரை வருட இடைவெளியில் "மறுபடியும் ஒரு காதல்" என்ற ஒரு படம் மட்டுமே வெளிவந்தது. அந்தப் படத்துக்கு அரசோ, ஆளுங்கட்சியோ எந்த இடையூறும் செய்யவில்லை. இன்னும் சொல்லப்போனால் அரசும், ஆளும் கட்சியும் அவரை கைபிள்ளையாகத்தான் பார்க்கிறது. சீரியசாக கருதவில்லை. ஆனால் தயாரிப்பாளர்கள்தான் தயங்குகிறார்கள்.
இதற்கிடையில் வடிவேலு மீண்டும் ஹீரோவாக நடித்து தனது ரீ என்ட்ரி கணக்கை துவக்க நினைத்தார். பலரிடம் கதை கேட்டும் வருகிறார். வடிவேலுவை வசூல் மன்னனாக்கிய "இம்சை அரசன் 23ம் புலிகேசி"யை இயக்கிய சிம்புதேவன் தற்போது அதன் இரண்டாம் பாகத்தின் ஸ்கிரிப்டை தயார் செய்து விட்டார். அதில நடிக்க வடிவேலுவும் ஓகே செய்து விட்டார். ஆனால் படத்திற்கான பட்ஜெட் 30 கோடியாம். அதில் வடிவேலு சம்பளம் மட்டும் 5 கோடியாம். இவ்வளவு பெரிய தொகையை இப்போதுள்ள சூழ்நிலையில் வடிவேலுவை நம்பி எந்த தயாரிப்பாளரும் முதலீடு செய்யத் தயாராக இல்லை. அதனால் அந்த ப்ராஜக்ட்டும் கிடப்பில் கிடக்கிறது.
இதற்கிடையில் வடிவேலு தற்போது தன் மகள் திருமணத்துக்கான ஏற்பாட்டில் பிசியாக இருக்கிறார். திருமணத்துக்கு அத்தனை அரசியல் கட்சித் தலைவர்களையும் அழைத்து "நான் பொதுவான ஆள்" என்று காட்டிக் கொள்ள முடிவு செய்திருக்கிறார். தனது பரம எதிரியான விஜயகாந்தின் பக்கம் தி.மு.க நெருங்குவது அவரை கவலையில் ஆழ்த்தியுள்ளது. அதனால்தான் திருமணத்தை அனைத்துக் கட்சி விழாவாக நடத்த ஏற்பாடு செய்து வருகிறார்.
இந்த நிலையில் வடிவேலு ஹீரோவாக நடிக்கும் படத்தை கே.எஸ்.ரவிகுமார் இயக்குவது முடிவாகி உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினியின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய டாக்டர் காயத்திரியின் கதை "ஆப்பிரிக்காவில் வடிவேலு". இந்தக் கதையை அவர் கே.எஸ்.ரவிகுமாரிடமும், வடிவேலுவிடவும் கூறியிருக்கிறார். இருவருக்குமே கதை பிடித்துவிட்டதால் சேர்ந்து பணியாற்ற முடிவு செய்து விட்டார்கள். "காட் மஸ்ட் பி கிரேஸி" பட டைப்பிலான கதை. ஆப்பரிக்கா காட்டில் தன்னந்தனியாக மாட்டிக் கொள்ளும் வடிவேலு அங்கு படும் சிக்கல்களும், சிரமங்களும்தான் கதை.
இதுகுறித்து இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் கூறியிருப்பதாவது: கோச்சடையானில் எனது பணி முடிந்து விட்டது. கோச்சடையான் ரிலீசுக்கு பிறகு ராணா பணிகள் தொடங்கலாம் என்று ரஜினி சார் கூறியிருக்கிறார். பஞ்சதந்திரம் பார்ட்-2 பண்ணலாம் என்கிற யோசனையும் உண்டு. இதற்கிடையில்தான் டாக்டர் காயத்திரி, வடிவேலுக்கு ஒரு கதை எழுதியிருக்கேன்னு சொன்னாங்க. அந்த கதை எனக்கு ரொம்ப புடிச்சிருந்தது. வடிவேலுவும் கதையை கேட்டுவிட்டு வந்து "பண்ணாலாமா?"ன்னு கேட்டார். சரி என்று சொல்லிவிட்டேன். இது ஒரு பிரமாண்டமான படமாக இருக்கும். தயாரிப்பாளர் கிடைத்ததும் ஆரம்பித்து விடுவோம். என்றார்.
ஏஜிஎஸ் எண்டர்டயிண்மெண்ட் கல்பாத்தி அகோரம், ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன், அல்லது ஈராஸ் நிறுவனம் தயாரிக்காலம் என்று கூறப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது.