இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பில்லா படத்தைத் தொடர்ந்து மீண்டும் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடித்து வருகிறார் அஜீத். ஏ.எம்.ரத்னம் தயாரித்துள்ள இந்த படத்தில் அஜீத்துடன் ஆர்யா, நயன்தாரா, டாப்சி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கடந்த 7 மாதங்களாக இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு வேலைகள் துரிதமாக நடந்து வந்தன. என்றாலும், படத்தின் தலைப்பை ரொம்பவே சீக்ரெட்டாக வைத்திருந்தார்கள். ஆனால் கடந்த மாதம் வலை என்று அவர்கள் தலைப்பு வைத்திருப்பதாக செய்திகள் கசிந்தன. அந்த தலைப்பை இப்போது உறுதிபடுத்தியுள்ளது அப்படக்குழு. சைபர் க்ரைம் ஆபீசராக அஜீத் இப்படத்தில் நடிப்பதும் வெளியாகியிருக்கிறது.
இப்படத்துக்கு வலை என்று தலைப்பு வைத்ததால் மற்றவர்களை விட அஜீத்தான் ரொம்பவே குஷியாக இருக்கிறாராம். காரணம், தமிழில் ஆசை என்ற இரண்டெழுத்து படம்தான் அவரை ரசிகர்களுக்கு முழுசாக அடையாளம் காட்டியது. அதையடுத்து வாலி என்ற படம் அவர் படத்துக்கான வியாபாரத்தை அதிகப்படுத்தியது. அதேபோல் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அஜீத் நடித்த தீனா படமும் அவருக்கு வெற்றியை கொடுத்தது. அதனால் இந்த வலை படமும் செண்டிமென்டாக தனக்கு பெரிய வெற்றியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கிறாராம்.
அதனால்தான் வலை டைட்டீலில் திருப்தி இல்லாமல் வேறு டைட்டீலாக வைக்கலாம் என்று யோசித்து வந்த விஷ்ணுவர்தன், அஜீத்துக்கு அந்த டைட்டீலில் இருந்த திருப்தியை மனதில் கொண்டு வலை என்றே இப்போது தனது சார்பில் அறிவித்திருக்கிறார்.