'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் லியோ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரின் 68வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார் என்று அறிவித்தனர். சினிமா அல்லாமல் விரைவில் அரசியலில் இறங்குகிறார் விஜய். கடந்த சில மாதங்களாக தன் ரசிகர்களின் மூலமாக அம்பேத்கர் போன்ற முக்கிய தலைவர்களுக்கு அவர்கள் பிறந்தநாள் அன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தும்படி அறிவுறித்தினார்.
இந்நிலையில் அடுத்தப்படியாக மாணவர்களை சந்திக்க உள்ளார். சமீபத்தில் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு தேர்வுகளில் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் முதல் மூன்று இடம் பிடிக்கும் மாணவ, மாணவிகளை நேரில் சந்திக்கிறார் விஜய் தகவல் வெளியானது. இப்போது வருகின்ற ஜூன் 2ம் வாரத்தில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதி தொகுதியிலும் 10ம், +2 வகுப்புகள் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 1500 மாணவ, மாணவிகளை விஜய் சந்திக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. கூடுதலாக, பெற்றோர்கள் இல்லாத நிலையிலும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளையும் விஜய் சந்திக்கிறார் என கூறப்படுகிறது. ஜூன் 14ல் இதற்கான நிகழ்வு நடக்கலாம் என கூறப்படுகிறது.