பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சமீபத்தில் "கேடி பில்லா கில்லாடி ரங்கா" படத்தில் ஒரு பாடல் பாடுவதற்கு சிம்பு 5 லட்சம் சம்பளமாக பெற்றார். இதற்கு யுவன் இசை அமைத்திருந்தார். இந்த தகவல் தனுசுக்கு செல்ல, அவரை விட தான் அதிக சம்பளம் வாங்க வேண்டும் என்று முடிவு செய்தார். சமீபத்தில் அவரை "சன் ஆப் சர்தார்" இந்திப் படத்தில் பாட இசை அமைப்பாளர் ஹிதேஷ் ரேஷ்மையாக அழைத்தபோதுகூட தனுஷ் பாட மறுத்தார். காரணம் இந்தியில் நடிகராக அறிமுகமாக வேண்டும் என்பதே தனுஷின் திட்டம். ஆனால் இப்போது சிம்புவின் சாதனையை முறியடிக்க மீண்டும் பாடுவது என்ற முடிவு செய்தார். அவரது முடிவுக்கு அண்ணன் செல்வராகவன் கைகொடுத்தார்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைப்பில் "இரண்டாம் உலகம்" படத்துக்காக ஒரு பாடலை பாடியுள்ளார் தனுஷ். இதற்காக அவர் பெற்றுள்ள சம்பளம் 8 லட்சம் என்கிறார்கள். இன்றைய தேதியில் ஒரு பாடலுக்கு அதிக சம்பளம் வாங்கிய பாடகர் தனுஷ்தானாம். சிம்பு, தனுஷ் ஈகோ போட்டியில் காலியாவது தயாரிப்பாளர்களின் கல்லாப்பெட்டிதான்.