ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ் திரையுலகில், இந்த நிமிடத்தில், ரொம்பவும் சந்தோஷமாகவும், பிசியாகவும் இருக்கும் நடிகை யார் என, கேட்டால், கண்களை மூடிக் கொண்டு, ஹன்சிகா மோத்வானியின் பக்கம், கை காட்டலாம். அந்த அளவுக்கு, ஏழு தமிழ் படங்களை, தன் கைவசம் வைத்துள்ளார், அவர்.இதுதவிர, இளம் சாதனையாளர் என்ற விருதும், அவருக்கு கிடைத்துள்ளதால், உற்சாகத்தில், ஊ.... லலலா... என, வலம் வருகிறார். ஹன்ஷிகாவின் தேதிக்காக பிரபல இயக்குனர்கள் கூட, காத்துக் கொண்டிருக்கிறார்களாம்.
கடந்த, 40 நாட்களாக, ஒருநாள் கூட, இடைவெளி இல்லாமல், தொடர்ந்து படப் பிடிப்பில் பங்கேற்று வருகிறாராம். இதனால், தன் குடும்பத்தினரையே மறந்து விட்டாராம். "இன்று என்ன தேதி, என்ன மாதம் என்று, அவரிடம் கேட்டால் கூட, சின்னக் குழந்தை போல், "தெரியவில்லை என, கை விரிக்கிறாராம். ஆனாலும், தான் நடிக்கும் படங்களின் படப் பிடிப்புகளில் குழப்பம் வந்து விடக் கூடாது என்பதற்காக, சரியான நேரத்தில், படப் பிடிப்பு தளத்தில் ஆஜராகி, அனைவரின் விழிகளையும், ஆச்சர்யத்தில் விரிய விடுகிறாராம், ஹன்சிகா.