பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சினிமாவை விட என்னுடைய குடும்பத்திற்கு தான் முதல் முன்னுரிமை கொடுப்பேன் என நடிகை நதியா கூறியுள்ளார். பூவே பூச்சூடவா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நதியா. அதன்பிறகு பல்வேறு தமிழ் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். தமிழ் மட்டுமல்லாது மலையாளத்திலும் ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார். இப்போதும் பூவே பூச்சூடவாவில் பார்த்த நதியா போன்றே இளமையாக காணப்படுகிறார்.
சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில், சினிமாவில் அதிகம் நடிக்காதது குறித்த கேள்விக்கு இப்படி பதிலளித்துள்ளார். அதாவது, தமிழ் சினிமாவோ அல்லது சீரியல்கள் செய்யவோ எனக்கு முதல்ல நேரம் கிடையாது. நான் தங்கியிருப்பதோ மும்பையில. குடும்பம் தான் எனக்கு முதல் முன்னுரிமை, சினிமா அப்புறம்தான் . என் பெரிய பொண்ணு பத்தாவது படிக்கிறாள், அவளோட படிப்பை நான் பார்க்கணும். சீரியல்களில் திரும்ப திரும்ப பழைய கதைகளையே சொல்லிக்கிட்டு இருக்காங்க. சினிமாவில் எனக்கு பிடிச்ச மாதிரி வித்தியாசமான கேரக்டர் வந்தால் நான் நடிப்பேன். அப்பப்போ என் மனநிறைவுக்காவும், என் ரசிக - ரசிகைகளின் சந்தோஷத்துக்காவும், சினிமா விளம்பரங்களில் நடிக்கிறேன் என்று கூறியுள்ளார்.