எனக்கு வீழ்ச்சி அல்ல, வளர்ச்சிதான்! - த்ரிஷா | இயக்குனராகிறார் மாஜி ஹீரோயின் ஸ்ரீப்ரியா! | நயன்தாராவும், டாப்சியும் ரொம்ப குளோஸ் | பாடகர் ஹரிஹரனுக்கு லதா மங்கேஷ்கர் விருது! | இயக்குனர் சங்க தேர்தலில் போட்டியிடுகிறார் ஆர்.வி.உதயகுமார்! | முதல்வருக்கு திருமண அழைப்பிதழ் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்குமார்-சைந்தவி! | பக்திமார்க்கத்தில் இறங்கினார் சிம்பு...! | மீண்டும் ஹீரோவாகிறார் கரு.பழனியப்பன்! | சில்க் ஸ்மிதாவே ரோல் மாடலாக எடுத்துக்கொண்டு சாதிக்கப்போகிறேன்! - சனாகான் | விஜய் பிறந்த நாளில் தலைவா ஆடியோ ரிலீஸ்? |
கவர்ச்சி என்பதை மூலதனமாக வைத்தே இன்றுவரை கோடம்பாக்கத்தில் வண்டியோட்டி வருபவர் ஹன்சிகா. ஆனால் அவரோ, தற்போது தான் பர்பாமென்ஸ் ஆர்ட்டிஸ்டாகி விட்டதாக அடிக்கடி ஞாபகப்படுத்தி வருகிறார். அதுமட்டுமின்றி, கதை சொல்லும் இயக்குனர்களிடமும், மொத்த கதையையும் கேட்டு விட்டு, தனது கேரக்டரை தனியாக பிரித்து, இதில் நான் நடிப்பதற்கு எந்தெந்த காட்சிகளில் வாய்ப்பு உள்ளது என்று விளக்கம் கேட்கிறாராம். அதையடுத்து டைரக்டர்கள் கொடுக்கும் விளக்கம் அவருக்கு திருப்தி கொடுத்தால் மட்டுமே அப்படத்தை ஏற்றுக்கொள்கிறாராம். அந்த அளவுக்கு தான் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல் காட்டிக்கொள்கிறார் ஹன்சிகா.
இதேபோல்தான், டெல்லி பெல்லி ரீமேக்கான சேட்டை படத்தில் நடிக்க வேண்டுமென்று இயக்குனர் கண்ணன் சொன்னபோதும், அதிர்ச்சியடைந்து விட்டாராம் நடிகை. ஏன் என்ன காரணம்? இன்னும் நான் கதையே சொல்ல ஆரம்பிக்கவில்லையே? என்று இயக்குனர் சொன்னபோது, அந்த படத்தைதான் நான் இந்தியில் பார்த்திருக்கிறேனே. அதனால்தான் கேட்பதற்கு முன்பே இவ்வளவு அதிர்ச்சி என்றாராம். ஆபாசம் வசனம் மட்டுமின்றி, ஆபாச காட்சிகள் நிறைந்த படம் அது. அதில் நான் நடித்தால் தமிழ் கலாச்சாரத்தை சீரழிப்பது போல் இருக்குமே என்று மறுத்தாராம் ஹன்சிகா. அதையடுத்து, தமிழ் பதிப்புக்காக தான் செய்த மாற்றங்களை அவருக்கு சீன் பை சீன் சொன்ன பிறகே நடிக்க சம்மதித்தாராம் ஹன்சிகா. குறிப்பாக ஆர்யாவுடனான உதட்டு முத்தக்காட்சியில்கூட கன்னியமாகத்தான் நடிப்பேன் என்று கேட்டுக்கொண்டாராம் ஹன்சிகா.
ஆனால் பின்னர் ஸ்பாட்டுக்கு வந்தபிறகுதான். படத்தில் ஏதாவது ஒரு ஸ்பெசல் இருக்க வேண்டுமென்று, டெல்லி பெல்லிக்கு இணையாக உதட்டு முத்தக்காட்சியில் புகுந்து விளையாடி விட்டாராம் ஆர்யா.