கேம் சேஞ்சர் படத்தில் மூன்று வில்லன்கள்? | ஒரே நேரத்தில் பஹத் பாசிலை வைத்து இரண்டு படங்களை தயாரிக்கும் ராஜமவுலி மகன்! | பெண்களால் முடியாதது எதுவுமில்லை! அண்ணா பல்கலை விழாவில் சூர்யா பேச்சு | கேரள ரசிகர்கள் தள்ளுமுள்ளு! விஜய்யின் கார் கண்ணாடி உடைந்தது!! | இறுதிக்கட்டத்தை நெருங்கிய ஜெயம் ரவியின் ஜீனி! | ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! |
ஆதியின் இயக்கத்தில் மோனிகா நாயகியாக நடித்த படம் சிலந்தி. அதுவரை அழகி மோனிகாவாக இருந்த அவர், அப்படத்தில் படுகவர்ச்சியாக நடித்து தனது பளிங்கு தேசத்தை பளிச்சென காட்டினார். அதனால் படத்தின் கதையில் ஆயிரம் ஓட்டைகள் இருந்தபோதும், எந்த குற்றம் குறையும் சொல்லாமல், மோனிகாவின் புதுக்கவர்ச்சிக்காகவும், மிட்நைட்டில் அவர் போட்ட குளியலுக்காகவும் ஆசைதீர பார்த்து ரசித்தார்கள் ரசிகர்கள். அதனால் சத்தமில்லாமல் படமும் வெற்றி பெற்றது. ஆனால் அதையடுத்து, மோனிகாவை தேடிச்சென்ற கதைகள் எல்லாம் குளியல் காட்சிகளுடன்தான் சென்றது. அதனால் விட்டால் தன்னை ஷகீலா ரேஞ்சுக்கு மாற்றி விடுவார்கள் என்று இனிமேல் கிளாமராக நடிக்க மாட்டேன் என்று மறுத்து வந்தார் மோனிகா.
இந்த நிலையில், தற்போது சிலந்தி படத்தை தயாரித்த நிறுவனம் மீண்டும் அப்படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்கிறதாம். அந்த படத்திலும் மோனிகா நடித்தால் நன்றாக இருக்குமே என்று தொடர்பு கொண்டார்களாம். ஆனால், சினிமாவில் எனக்கிருந்த ஹோம்லியான இமேஜை கெடுத்ததே நீங்கள்தான். இப்போது அதிலிருந்து என்னை மாற்றி வருகிறேன். அதனால் இன்னொரு முறையும் அப்படி நடிக்க வேண்டுமென்று என் வீட்டுப்பக்கம் வராதீர்கள் என்று வரிந்து கட்டி விட்டாராம். அதனால் அடுத்தபடியாக அப்படத்தில் நடிக்க சரியான நடிகையாக தேடி வந்தவர்களின் வலையில் இப்போது பரதேசி படத்தில் நடித்துள்ள வேதிகா சிக்கியுள்ளாராம். சிலந்தி பார்ட்-2வின் கதையை கேட்ட அவர், டபுள் ஓ.கே சொல்லிவிட்டாராம். ஆக, வேதிகாவின் மிட்நைட் குளியலை தமிழக ரசிகர்கள் ஆசைதீர கண்டுகளிக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை.