தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அனுஷ்கா-ப்ரியாமணி இருவருமே நல்ல திறமையான நடிகைகள் என்பதை சில படங்களில் நிரூபித்து விட்டார்கள். என்றாலும் அவர்களின் திறமைக்கேற்ற தீனி போடத்தான் இயக்குனர்கள் இல்லை. பெரும்பாலான இயக்குனர்கள் அவர்களின் கவர்ச்சியை குறிவைத்தே வாய்ப்புக்கொடுத்து வருகின்றனர். அப்படி நடிப்பதற்கு பெரிய அளவில் சம்பளம் கொடுக்கிறார்களாம். அதனால்தான் காசு விசயத்தில் கஞ்சத்தனம் செய்யும் கோடம்பாக்கத்தில் அடக்கிவாசிக்கும் மேற்படி நடிகைகள், ஆந்திராவில் தங்களுக்கு அள்ளிக்கொடுப்பதால், அவர்களது எதிர்பார்ப்பறிந்து கவர்ச்சியை மானாவாரியாக வாரி வழங்குகிறார்களாம்.
அந்த வகையில், தற்போது அனுஷ்கா நடிப்பில் ஆந்திராவில் வெளியான மிர்ச்சி படத்திலும், ப்ரியாமணி நடிப்பில் வெளியான டிக்கா படத்திலும் கிட்டத்தட்ட மேற்படி அம்மணிகள் கவர்ச்சியின் எல்லையையே தொட்டு விட்டார்களாம். துக்கடா டிரஸ் அணிந்து அவர்கள் நடித்ததால்,இளவட்ட ரசிகர்களின் கூட்டம் மேற்படி படங்களுக்கு அலைமோதியதாம். இதன்காரணமாக, ஆந்திரதேசத்து சமூக ஆர்வலர்கள் மேற்படி நடிகைகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதோடு பொதுநலன் கருதி, அனுஷ்கா-ப்ரியாமணி மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்களாம். இதனால் அனுஷ்கா-ப்ரியாமணி இருவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.