வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
அனுஷ்கா-ப்ரியாமணி இருவருமே நல்ல திறமையான நடிகைகள் என்பதை சில படங்களில் நிரூபித்து விட்டார்கள். என்றாலும் அவர்களின் திறமைக்கேற்ற தீனி போடத்தான் இயக்குனர்கள் இல்லை. பெரும்பாலான இயக்குனர்கள் அவர்களின் கவர்ச்சியை குறிவைத்தே வாய்ப்புக்கொடுத்து வருகின்றனர். அப்படி நடிப்பதற்கு பெரிய அளவில் சம்பளம் கொடுக்கிறார்களாம். அதனால்தான் காசு விசயத்தில் கஞ்சத்தனம் செய்யும் கோடம்பாக்கத்தில் அடக்கிவாசிக்கும் மேற்படி நடிகைகள், ஆந்திராவில் தங்களுக்கு அள்ளிக்கொடுப்பதால், அவர்களது எதிர்பார்ப்பறிந்து கவர்ச்சியை மானாவாரியாக வாரி வழங்குகிறார்களாம்.
அந்த வகையில், தற்போது அனுஷ்கா நடிப்பில் ஆந்திராவில் வெளியான மிர்ச்சி படத்திலும், ப்ரியாமணி நடிப்பில் வெளியான டிக்கா படத்திலும் கிட்டத்தட்ட மேற்படி அம்மணிகள் கவர்ச்சியின் எல்லையையே தொட்டு விட்டார்களாம். துக்கடா டிரஸ் அணிந்து அவர்கள் நடித்ததால்,இளவட்ட ரசிகர்களின் கூட்டம் மேற்படி படங்களுக்கு அலைமோதியதாம். இதன்காரணமாக, ஆந்திரதேசத்து சமூக ஆர்வலர்கள் மேற்படி நடிகைகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதோடு பொதுநலன் கருதி, அனுஷ்கா-ப்ரியாமணி மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்களாம். இதனால் அனுஷ்கா-ப்ரியாமணி இருவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.