கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
ஹீரோவாக தொடர நடிகர் வடிவேலுவுக்கு தைரியமில்லை என்று நடிகர் கருணாஸ் கூறியுள்ளார். பாலாவின் நந்தா படத்தின் மூலம் காமெடி நடிகராக அறிமுகமானவர் கருணாஸ். முதல்படத்திலேயே நல்ல வரவேற்பு கிடைக்க தொடர்ந்து பல்வேறு படங்களில் காமெடி நடிகராக நடித்து, தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக உயர்ந்தார். காமெடி நடிகராக இருந்த அவருக்கும், ஹீரோவாகும் ஆசை வந்ததை தொடர்ந்து, திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரத்தில் அம்பானி போன்ற படங்களில் ஹீரோவாக நடித்தார். ஓரளவுக்கு நல்ல பெயரை பெற்றுதந்ததை தொடர்ந்து, இப்போது அதிக படங்களில் ஹீரோவாக நடிக்க தொடங்கியுள்ளார். தற்போது 3 படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அதில் ஒருபடம் இருதினங்களுக்கு முன் ரிலீஸாகியுள்ளது.
இந்நிலையில் கருணாஸ் அளித்த பேட்டி ஒன்றில், நடிகர் வடிவேலுவை தாக்கியுள்ளார். வடிவேலு ஹீரோவாக நடிப்பை தொடருவது குறித்த கேள்விக்கு இப்படி அவர் பதிலளித்துள்ளார். அதாவது, காமெடியன் ஒருத்தன் ஹீரோவாவது சாதாரணம் இல்லை. அதை முதல் படத்தில் நிரூபித்த வடிவேலு, அடுத்த படம் தோல்வியடைந்ததும் ஹீரோவாக நடிப்பதில் பின் வாங்கிவிட்டார். தொடர்ந்து நான்கு படங்கள் ப்ளாப் கொடுத்த ஹீரோக்கள் கூட அடுத்த ஐந்தாவது படத்தில் வெற்றி கொடுக்க ஹீரோவாகத்தான் நடிக்கிறாங்க. ஆனால் வடிவேலுவுக்கு ஹீரோவாக தொடர தைரியமில்லை. அதேசமயம் அவர் சிறந்த நடிகர். இந்த இரண்டு வருஷம் அவர் சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும், அவரோட இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அவர் நடிக்காததால் அவருக்கு எந்த நஷ்டமும் இல்லை. என்னைப்போன்ற அவரது ரசிகர்களுக்கு தான் நஷ்டம் என்று கூறியுள்ளார்.