'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
தணிக்கை குழு நேர்மையாகத்தான் நடக்கிறது, அதில் தவறு நடக்கிறது என்பது சொல்வது சிறுபிள்ளைத்தனமானது என்று கூறியுள்ளார் டைரக்டர் பாலா. பாலா இயக்கியுள்ள பரதேசி படம் அடுத்தவாரம் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பாலா கூறியுள்ளதாவது, பரதேசி படம் எடுத்து முடிப்பதற்குள் ரத்தக்கண்ணீர் வடித்துவிட்டேன் என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால் நானும் என் படப்பிடிப்பு குழுவினரும் அங்கு வாழும் காட்டு மாடுகளின் உண்ணிப்பூச்சிகளுக்கும், தேயிலை தோட்டத்தில் உள்ள அட்டைப்பூச்சிகளுக்கும் எங்களுடைய ரத்தத்தை உணவாக தாரைவார்த்து கொடுத்துவிட்டு வந்திருக்கிறோம். தமிழ் சினிமாவில் எந்த கேரக்டரை கொடுத்தாலும் அதை சரியாக செய்யும் நடிகர்கள் ஒருசில பேர் தான் இருக்கிறார்கள். பரதேசி படம் வெளிவந்த பிறகு அந்த வரிசையில் அதர்வாவும் சேர்வார் என்றார்.
தணிக்கை குழு பற்றியான கேள்விக்கு பதிலளித்த பாலா, என்னுடைய படங்களில் ஆபாசம் இல்லாததால், தணிக்கை குழுவுக்கும் எனக்கும் பிரச்னை வந்தது கிடையாது. தணிக்கை குழுவை பொறுத்தமட்டில் நேர்மையாகத்தான் நடக்கிறது. பணம் வாங்கிகொண்டு படத்தை அனுமதிக்கிறார்கள் என்று ஒரு சிலர் கூறுவது சிறுபிள்ளைத்தனமானது மட்டுமல்ல, அரசாங்கத்தை அவமதிக்கும் செயல், அவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.