ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மணிரத்னம் இயக்கிய படம் "கடல்". கார்த்திக் மகன் கவுதம், ராதா மகள் துளசி அறிமுகமானார்கள், அரவிந்த்சாமி ரீ-என்ட்ரி ஆனார். அர்ஜுன் முதன் முறையாக வில்லனாக நடித்தார். இத்தனை சிறப்புகள் இருந்தும் படம் எதிர்பார்த்தபடி சரியாக போகவில்லை. அதற்காக ஒரு மாபெரும் கலைஞன் மணிரத்தினத்தை போலீஸ் பாதுகாப்பு கேட்கும் அளவிற்கு கொண்டு நிறுத்திவிட்டார்கள் சிலர்.
இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் மொத்த உரிமம் வைத்திருந்த மன்னன் என்பவரிடம் கோவை, மதுரை, சென்னை ஆகிய மூன்று ஏரியாக்களின் உரிமையை 6 கோடி கொடுத்து வாங்கியது. படம் வெளிவந்த பிறகு ஒரு கோடிதான் வசூலானதாம். இதனால் தனக்கு 5 கோடி நஷ்டம் என்று லிங்குசாமியின் தம்பி சுபாஷ் சந்திர போஸ், போலீஸ் கமிஷனரை சந்தித்து மனு கொடுத்தார். இது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விநியோகஸ்தர்கள் வியாபாரிகள் அவர்கள் எதுவேண்டுமானலும் செய்து கொள்ளட்டும் மணிரத்னம் சட்டப்படி அதனை எதிர்கொள்வார். ஆனால் சக படைப்பாளியான லிங்குசாமி இப்படிச் செய்யலாமா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் லிங்குசாமி தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு விட்டார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடல் திரைப்படத்தின் விநியோக உரிமையை சென்னை, கோவை, மதுரை ஆகிய மூன்று ஏரியாக்களுக்கு வாங்கி வெளியிட்டது எங்களது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம். இந்தப் படத்தை வாங்கியவர்கள் மணிரத்தினத்திடம் நஷ்ட ஈடு கேட்டு வருவதாக தொடர்ந்து செய்திகள் அடிபட்டு வருகிறது.
ஒரு படம் வெற்றி பெறுவது, தோல்வி அடைவது, லாபம், நஷ்டம் எல்லாம் நம் கையில் இல்லை. மணி சார் மிகப்பெரும் கலைஞன். எனக்கு மானசீக குரு. அவருடைய பல படங்கள் எனக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்துள்ளது. அவரிடம் போய் "உங்கள் படத்தை வாங்கினேன் நஷ்ட ஈடு கொடுங்கள்" என்று சொல்லி எந்த சூழ்நிலையிலும் கேட்க மாட்டேன். இது சார்பாக நானோ என் அலுவலகத்தில் இருந்தோ யாரும் போக மாட்டோம் என்று தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு லிங்குசாமி தன் அறிக்கையில் கூறியுள்ளார்.