ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஒன்பதுல குரு படத்தில் நடித்தபோது, வினய்யை விட லட்சுமிராயை காஸ்ட்லியான ஓட்டலில் தங்க வைத்ததாகவும், இதனால் வினய் போய் தயாரிப்பாளரிடம் சண்டை செய்ததாகவும் சில நாட்களுக்கு முன்புவரை பரபரப்பு செய்தியை கொளுத்திப்போட்டிருந்தார்கள். ஆனால் இதையறிந்து கொதித்துப்போயிருக்கிறார் வினய். காரணம். அப்படியொரு சம்பவமே நடைபெறவில்லை என்கிறார். தமிழில் இப்போதுதான் சில படங்களை கைப்பற்றி பிசியாகி வருகிறேன். இந்த நேரத்தில் ஒன்பதுலகுரு படத்தின் பப்ளிசிட்டிக்காக இப்படி என் பெயரை கெடுக்கும் வகையில் என்னைப்பற்றி தவறான செய்திகளை வெளியிடுகிறார்களே என்று புலம்புகிறார்.
அதோடு, சம்பந்தப்பட்ட படக்குழுவை தொடர்பு கொண்டு, உங்களுக்கு விளம்பரம் வேண்டும் என்றால் வேறு மாதிரியாக செய்தி வெளியிடுங்கள். என் பெயரை கெடுக்கும் தவறான தகவல்களை வெளியிடாதீர்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளாராம். அதேபோல், லட்சுமிராயும் வெளியில்தான் யாரோ இப்படி செய்தி பரப்பி விட்டதாக நினைத்தேன். ஆனால் என் சம்பந்தப்பட்ட படக்குழுவே இப்படி என்னை வினய்யுடன் இணைத்து தப்பான செய்தியை பரப்பலாமா? என்று கேட்டுள்ளாராம். ஆக, இன்னும் எக்கச்சக்கமான இதுபோன்ற செய்திகளை பரப்பி விட யோசித்து வந்த அப்படக்குழு இப்போது கப்சிப்பென்றாகி விட்டது.