மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
சேட்டை படத்திலிருந்து எனது முத்தச்சேட்டை ஆரம்பமாகிறது என்று சினிமா வட்டாரங்களில் மார்தட்டி வருகிறார் ஆர்யா. அதேபோல், சேட்டை படத்தில் ஹன்சிகாவுடன் சூட்டை கிளப்பும் உதட்டு முத்தக்காட்சியில் நடித்து பரபரப்பை கிளப்பி விட்டிருக்கிறார். அதையடுத்து, இனிமேல் தனது படங்களில் காமெடியுடன் கூடிய முத்த சமாச்சாரங்களும் இருந்தால்தான், தன்னால் மார்க்கெட்டில் நிற்க முடியும் என்பதை புரிந்து கொண்ட ஆர்யா, அடுத்தடுத்து தான் நடிக்கும் படங்களில் முத்தக்காட்சி கட்டாயம் வேண்டும் என்று கண்டிசன் போட்டே கதைகளை ஓ.கே செய்து வந்தார். அந்த அடிப்படையில் முன்தினம் பார்த்தேனே, தடையறத்தாக்க படங்களை இயக்கிய மகிழ்திருமேனி இயக்கும் படத்தில் நடிக்கவும் சம்மதம் சொல்லியிருந்தார் ஆர்யா.
ஆனால், அந்த கதைக்கு பொருத்தமான நாயகி சமந்தாதான் என்று அவரை தொடர்பு கொண்டு கதை சொன்னார் டைரக்டர். அப்போது, ஒரு உதட்டு முத்தக்காட்சியும் உள்ளது என்று சொன்னபோது, இந்த கதைக்கு முத்தக்காட்சி அவசியமே இல்லையே. தேவையில்லாமல் திணித்தால் கதையும் கெட்டுப்போகும், நடிப்பவர்களின் பெயரும் கெட்டுப்போகும் என்று தனது கருத்தை முன் வைத்தாராம் சமந்தா. அதற்கு ஆர்யா விரும்புவதாக டைரக்டர் இழுத்திருக்கிறார். ஆனால் சமந்தாவோ, அவர் விருப்பப்பட்டால் நான் உடன்பட வேண்டாமா? எனக்கு இந்த மாதிரி நடிப்பதெல்லாம் சுத்தமா பிடிக்காது என்று முகத்தில் அருவருப்பை காண்பித்தாராம். இதையடுத்து, சமந்தா கண்டிப்பாக படத்துக்கு வேண்டும் என்பதில் டைரக்டர் உறுதியாக இருப்பதால், உதட்டு முத்தக்காட்சியை இந்த ஒரு படத்தில் மட்டும் ஆற போட முடிவு செய்திருக்கிறாராம் ஆர்யா.