மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? |
மலையாள சினிமாவில் இருந்து தமிழுக்கு வந்தவர் அபிராமி. வானவில் படத்தில் அறிமுகமான அவர் அதன்பிறகு மிடில் கிளாஸ் மாதவன், தோஸ்த், சமுத்திரம், சார்லி சாப்ளின், விருமாண்டி படங்களில் நடித்தார். திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டிலான அபிராமி 10 ஆண்டுகளுக்கு பிறகு '36 வயதினிலே' படத்தின் மூலம் ரீ என்ட்ரி ஆனார்.
தற்போது மலையாள படங்களில் நடித்து வரும் அபிராமி தமிழில் மாறா, சுல்தான், நித்தம் ஒரு வானம் படங்களில் நடித்ததார். தற்போது அவர் மீண்டும் தமிழில் 'பாபா பிளாக் ஷீப்' என்ற படத்தின் மூலம் கதை நாயகி ஆகியிருக்கிறார்.
ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராஜ்மோகனின் இயக்கத்தில், பள்ளி குழந்தைகளின் வாழ்வை மையப்படுத்தி உருவாகி வரும் படம் 'பாபா பிளாக் ஷீப்'. பள்ளிக்குழந்தைகளின் மழலைத்தனம், விளையாட்டுத்தனம், சேட்டைகள், அவர்களின் இன்பங்கள், துன்பங்கள் எல்லாம் இணைந்த டிராமாவாக உருவாகிறது.
‛‛இது பள்ளிக் குழந்தைகளின் வாழ்வை சொல்லும் ஒரு அழகான டிராமா. இப்படத்தில் ஒரு குழந்தையை பிரசவம் முதல் பள்ளிக்கூடம் வரை சுமக்கும் அன்னை கதாபாத்திரம் இருந்தது. இப்பாத்திரத்திற்காக நடிகை அபிராமியை அணுகினேன், கதையை கேட்டவுடன் அவருக்கு மிகவும் பிடித்து, நான் நடிக்கிறேன். படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டோம், படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடக்கிறது என்றார் ராஜ்மோகன்.