மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
எங்கேயும் எப்போதும் படத்திற்கு முன்பு வரை தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்தவர் ஜெய். ஆனால் அந்த படத்தில் இன்னொரு நாயகனாக சர்வானந்த்தும் நடித்ததால், அப்போதில் இருந்தே ஜெய்யை ஈகோ தொற்றிக்கொண்டதாம். அதோடு, அப்படத்தின் நாயகி அஞ்சலி கமர்சியல் ரீதியாக பெரிய நடிகை என்பதால், அவருக்கே ஸ்பாட்டில் தடபுடல் கவனிப்புகள் நடந்ததாம். அதைப்பார்த்து கொதித்துப்போனாராம் ஜெய். இதனால் பெரும்பாலான நாட்களில் ஸ்பாட்டுக்கு தாமதமாக வருவதை ஒரு கொள்கையாகவே கடை பிடித்து வந்திருக்கிறார். குறிப்பாக, அஞ்சலி, சர்வானந்த் போன்றவர்கள் ஸ்பாட்டுக்கு வந்த பிறகு, தான் வந்து இறங்கினால்தான் மரியாதை என்று அப்படி செய்து வந்தாராம்.
அதையடுத்து, இப்போது கெளதம்மேனன் தயாரிப்பில் நடித்து வரும் தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும் படத்திலும் அதே மாதிரி ஈகோவை வெளிப்படுத்தி வருகிறாராம் ஜெய். டேக் ரெடியாகி விட்டது என்று உதவி இயக்குனர்கள் சொன்னால் உடனே வருவதில்லையாம். ஒரு தடவைக்கு பல தடவை சொன்னபிறகுதான் எழுந்து வருவாராம். அதோடு, டேக் ஓ.கே இல்லை என்று டைரக்டர் சொன்னாலும், இல்லை நல்லாதானே வந்திருக்கு. இதையே வைத்துக்கொள்ளுங்கள் என்கிறாராம். இதனால் சினிமாவில் வளர்ந்து நிற்கும் நடிகர்களே, இயக்குனர் சொல்வதற்கு மறுபேச்சு பேசுவதில்லை. ஆனால் இந்த வளராத நடிகர் தொல்லை தாங்க முடியலையே என்று தலையில் அடித்துக்கொள்கிறார்களாம்.