பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கோடம்பாக்கத்தில் மினிமம் கியாரண்டி நடிகையாக வலம் வந்தவர் சுனைனா. ஆரம்பத்தில் கிளாமர் நடிகையாக வந்தவர், பின்னர் இதை வைத்து காலம்தள்ள முடியாது என்று அழுத்தமான கதாபாத்திரங்களை தேடி வந்தார். அப்போதுதான் தனது நீர்ப்பறவை படத்துக்கு நாயகி செலக்சனில் ஈடுபட்டிருந்தார் சீனுராமசாமி. அதையறிந்து அப்படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்தார் சுனைனா. ஏற்கனவே பரிட்சயமான முகம் என்பதால் அவர் நடித்தால் இன்னும் கேரக்டர் வலுப் பெறும் என்று அவரை மீனவ ஏரியா பெண்ணாகவே மாற்றியமைத்தார் இயக்குனர். அதற்காக, சுனைனாவின் உடம்பெங்கும் கறுப்பு வண்ணத்தை பூசி அவரை அந்த எஸ்தர் கேரக்டராகவே மாற்றினார்.
சுனைனாவும், இதுவரை எந்த படத்திலும் நடிக்காத அளவுக்கு தனக்குள் இருந்த ஒட்டுமொத்த நடிப்பாற்றலையும் கசக்கிப் பிழிந்து ஊற்றினார். ஆனாலும் அப்படத்தின் தோல்வியால் அது பயனற்றுப்போனது. அதோடு, அதன்பிறகு சுனைனாவை கண்டுகொள்வார் இல்லை. அதனால் மீண்டும் தெலுங்கு சினிமாவிற்குள் தஞ்சமடைந்திருக்கிறார். இந்நிலையில், கோலிவுட் சில இயக்குனர்கள் அவரை நடிக்க வைப்பதற்காக தேடி வருகிறார்கள். ஆனால், சுனைனா பழைய போன் நம்பர்களை மாற்றிவிட்டதால், அவரை தொடர்பு கொள்ள முடியவில்லையாம். அவர் ஐதராபாத்தில் எங்கே இருக்கிறார் என்கிற விவரமும் இங்குள்ள மீடியேட்டர்களுக்கு தெரியவில்லையாம். அதனால் தற்போது ஒரு புதுமுக இயக்குனர் தனது படத்துக்கு சுனைனாவை புக் பண்ணியே தீருவது என்று ஐதராபாத்தில் முகாமிட்டு, அவரை தேடி வருகிறாராம்.