ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
"பசங்க" பாண்டிராஜ் இயக்கும் "கேடி பில்லா கில்லாடி ரங்கா" படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து வருகிறார். இதில் சிம்பு ஒரு பாடல் பாடியுள்ளார். இதற்காக அவருக்கு 5 லட்சம் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு பாடகருக்கு கொடுக்கப்பட்ட அதிக பட்ச சம்பளம் இது என்று கூறப்படுகிறது. இன்று முன்னணில் உள்ள பாடகர்களே 50 ஆயிரம் முதல் ஒரு லட்சதிற்குள்தான் சம்பளம் வாங்குகிறார்கள். எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கே.ஜே.யேசுதாஸ் போன்றவர்களுக்கே ஒரு லட்சத்திற்கும் குறைவான சம்ளம்தான். உதித் நாராயணன், உன்னி மேனன், உன்னி கிருஷ்ணன், கார்த்தி, சின்மயி, ஆண்ட்ரியா, ஹரிகரன், போன்ற முன்னணி பாடகர்கள் யாருக்குமே ஒரு லட்சத்திற்குமேல் சம்பளம் இல்லை. ஆனால் சிம்புவுக்கு 5 லட்சம் கொடுத்திருக்கிறார்கள்.
இது மற்ற பாடகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு பாடகர் கூறியதாவது:"சினிமாவில் பட்ஜெட்டை குறைக்க வேண்டும் என்பதற்காக ஹீரோக்கள் தங்கள் சம்பளத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில் பாடகரின் சம்பளத்தை லட்சக் கணக்கில் நிர்ணயிப்பது ஆபத்தானது. இதை பார்த்து விட்டு முன்னணியில் இருக்கும் பாடகர்கள் ஈகோவில் லட்சக்கணக்கில் கேட்பார்கள். இதனால் இசை அமைக்கும் செலவு அதிகரிக்கும், பட்ஜெட்டும் அதிகரிக்கும். ஒரு பாட்டு, இரண்டு பாட்டு பாடும் சிம்பு இதுபோன்ற அலம்பல்களை குறைத்துக் கொள்ள வேண்டும். அவரது வேலைகளை நடிப்போடு வைத்துக் கொள்ளட்டும். இசை உலகம் அமைதியாகவும், நன்றாகவும் போய்க் கொண்டிருக்கிறது. அதனை அவர் கெடுக்க வேண்டாம்." என்றார். ஒரு பாடகி கூறும்போது "முதலில் சிம்பு ஒரு நல்ல பாடகரே இல்லை. அவருக்கு 5 லட்சம் என்பது ஒரு விளம்பர ஸ்டண்டுதான். ஆனால் இதை வளரவிடக்கூடாது. பாடகர்கள் நாங்கள் கட்டுகோப்பாக எங்கள் வேலையை செய்கிறோம். அதை கெடுக்க வேண்டாம்" என்றார்.
முன்னணி பாடகர்கள்கூட சிறு பட்ஜெட் படங்களில் குறைந்த சம்பளம் வாங்கிக் கொண்டு பாடிவருகிறார்கள். மிகக் குறைந்த பட்ஜெட்டில் இசை அமைக்கும் புது இசை அமைப்பாளர்களுக்கு இது சாதகமாக இருந்தது. இனி இதிலும் சிக்கல் வரும் என்று புதிய இசை அமைப்பாளர்கள் அஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். இதுகுறித்து அவர்கள் இசை அமைப்பாளர்கள் சங்கத்தில் முறையிடவும் முடிவு செய்திருக்கிறார்கள்.