தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஆடுகளம் டாப்சிக்கு தென்னிந்திய சினிமாதான் சமீபகாலமாக அடைக்கலம் கொடுத்து வருகிறது. ஆனால் அவருக்கோ, பாலிவுட்டில் புகழ் பெற வேண்டும் என்பதுதான் தீராத கனவாகியிருக்கிறது. அதனால் தற்போது தமிழில் வலை, முனி பாகம் 3 கங்கா படங்கள் மற்றும் தெலுங்கு இரண்டு படங்களில் நடித்து வந்தபோதும், இந்தியில் நடித்துள்ள சஷ்மே பத்தூர் என்ற படத்தையே பெரிய அளவில் எதிர்நோக்கியுள்ளார். அதனால் அப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வரும் டாப்சி, அதற்காக இங்கு படப்பிடிப்பு இருந்தபோதும், முக்கிய வேலை இருக்கிறது என்று சொல்லி மும்பைக்கு பறந்து விடுகிறார்.அந்த அளவுக்கு இந்தி சினிமா மீது அதிக ஆர்வம காட்டுகிறார் டாப்சி.
இதுபற்றி அவர் கூறுகையில், இந்தி சினிமாவில் டாப் நடிகை என்ற அங்கீகாரத்தை பெற வேண்டும் என்பதுதான் எனது நோக்கமே. அதற்காகத்தான் தென்னிந்திய படங்களில் நடித்துக்கொண்டே இந்தி சினிமாவை டார்கெட்டாக வைத்து செயல்பட்டு வந்தேன். அப்படி நடித்து வந்தபோதுதான் இந்த சஷ்மே பத்தூர் பட வாய்ப்பு கிடைத்தது. இப்படத்தில் எனக்கு சுட்டித்தனமான வேடம். பர்பாமென்ஸ் பண்ண நிறைய வாய்ப்பு கிடைத்தது. அதனால் இந்த படம் திரைக்கு வரும்போது இந்தியில் எனக்கு ஒரு நல்ல இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன். அதற்காகத்தான் இப்படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில்கூட அதிக ஆர்வம் காண்பித்து வருகிறேன் என்கிறார் டாப்சி.