இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஆசியாவிலேயே முதல் திரைப்படமாக கமலின் விஸ்வரூபம் படம், ஆரோ 3டி தொழில்நுட்பத்தில் வெளிவந்ததை தொடர்ந்து, இப்போது 2வது படமாக அமீரின் அதி-பகவனும் ஆரோ 3டியில் வெளியாக உள்ளது. அமீர் இயக்கத்தில், ஜெயம் ரவி, நீத்து சந்திரா நடிப்பில் உருவாகியுள்ள படம் ஆதி-பகவன். முதல்முறையாக அமீர் கமர்ஷியல் கதைகளத்தை கையில் எடுத்துள்ளார். மாபியா கும்பலை மையப்படுத்தி இப்படத்தின் கதை உருவாகியுள்ளது. இப்படம் நாளை(22ம் தேதி) ரிலீஸ் ஆகிறது. முன்னதாக இப்படத்திற்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் படத்தின் தலைப்பை அமீரின் ஆதி-பகவன் என்று மாற்றியுள்ளார் டைரக்டர் அமீர். அதுமட்டுமின்றி இப்படத்தை ஆரோ 3டி தொழில்நுட்பத்திலும் வெளியிட உள்ளார்.
இதுகுறித்து அமீர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆதி-பகவன் படத்திற்கு இந்து மதக்கடவுள்களை அவமதிப்பதாக ஏற்பட்ட குற்றச்சாட்டின் காரணமாக போலீஸ் கமிஷனர் அலுவலகம், முதல்வரின் தனிசெல் பிரிவு மற்றும் தணிக்கை குழு ஆகியோரிடம் 100-க்கும் மேற்பட்ட புகார் மனுக்கள் வந்ததை தொடர்ந்து பலத்த எதிர்ப்பு மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே எனது ஆதி-பகவன் படம், அமீரின் ஆதி-பகவனமாக பெயர் மாற்றப்பட்டு, ஏ சான்றுடன் வெளியாகிறது. அதுமட்டுமின்றி, விஸ்வரூபம் படத்தை தொடர்ந்து ஆரோ 3டி ஒலி அமைப்பில் ஆசியாவிலேயே 2வது படமாக எனது படம் நாளை 22ம் தேதி உலகம் முழுக்க ரிலீஸ் ஆக இருக்கிறது.
மேலும் எனது திரைப்பட சில குழுக்களை திருப்திப்படுத்தும் நோக்கத்துக்காக ஏ சான்று வழங்கி இருந்தாலும், குடும்பத்துடன் அனைத்து தரப்பினரும் பார்த்து ரசிக்ககூடிய கமர்ஷியல், ஆக்ஷ்ன் படமாக அமீரின் ஆதி-பகவன் படம் உருவாகி இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அமீர் கூறியுள்ளார்.