ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகர் கமலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தது தொடர்பாக, விளக்கம் கேட்டு, நடிகர் சங்கம் அனுப்பிய கடிதத்திற்கு, நடிகர் விஷால் அதிருப்தி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். நடிகர் கமல்ஹாசன் நடித்து, இயக்கிய,"விஸ்வரூபம் படத்தை வெளியிடுவதில், சிக்கல் ஏற்பட்டபோது, நடிகர், நடிகைகள் பலர், கமலுக்கு ஆதரவு தெரிவித்தனர். பிரச்னையில், நடிகர் சங்கம் ஆதரவு தெரிவிக்கவில்லை எனவும், அப்போது புகார் எழுந்தது. இந்நிலையில், "பேஸ் புக்கில், "விஸ்வரூபம் படப் பிரச்னையில், நடிகர் சங்கம் கமல்ஹாசனுக்கு உதவவில்லை என விஷால் கருத்து தெரிவித்தார். இதற்கு விளக்கம் கேட்டு, நடிகர் சங்கம் கடிதம் அனுப்பியது.
கடிதம்: இதற்கு பதிலளித்து, விஷால் எழுதிய கடிதம் வருமாறு: நமது நடிகர் சங்கத்தின் மூத்த நடிகர் கமல்ஹாசனின், விஸ்வரூபம் படம் தொடர்பாக, எனக்கு ஏற்பட்ட ஆதங்கத்தை, அவருக்கு ஆதரவாக, இணைய தளத்தில் தெரிவித்திருந்தேன். என்னைப் போலவே, பல நடிகர்களும் கருத்து வெளியிட்டனர். என் கருத்தில் தவறு இல்லை. நடிகர் சங்க உறுப்பினர்களை, நான் விமர்சிக்கவில்லை. விஸ்வரூம் பட பிரச்னையில், கமலுக்கு ஆதரவாக இருந்தோம். ஆனால், நடிகர் சங்க செயற்குழு கூட்டத்தை கூட்டியோ, அவசர பொதுக்குழு கூட்டத்தை கூட்டியோ, ஒரு தீர்மானம் நிறைவேற்றி, கமலுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. நம் சங்க செயல்பாடுகள் மற்றும் வழக்குகள் குறித்து, பல உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை வெளியிட்டு உள்ளனர். அது போல், நானும் என் கருத்தை தெரிவித்துள்ளேன். நம் சங்கத்தின் சார்பில், இளம் நடிகர்கள், சி.சி.எல்., கிரிக்கெட்டில் பங்கேற்று, பிரதிபலன் பாராமல் விளையாடினோம். அதன் மூலம் வந்த வருவாயை, நலிந்த நடிகர்களுக்கு பெற்றுக் கொடுத்தோம்.
பாக்கி தொகை: ஆனால், நான் நடித்து, சமீபத்தில் வெளியான, "சமர் படத்தில், எனக்கு வரவேண்டிய பாக்கித் தொகையை பெறுவதற்கு, நான் சங்கத்தில் புகார் கொடுத்தேன். ஆனால், எனக்கு எந்தவிதமான முழுமையான உதவியும் சங்கம் மூலம் செய்யப்படவில்லை. என் இந்த விளக்கத்தை ஏற்றுக் கொண்டு, என்னை போன்ற இளம் நடிகர்களை புண்படுத்தாமல், சங்கச் செயல்பாடுகளை சங்க உறுப்பினர்களுக்கு ஆதரவாகவும், சங்கத்தை குறிப்பிட்ட சில நபர்களுக்கு ஆதரவாக மட்டும் நடத்தாமல், வெளிப்படையாக செயலாற்ற வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு, விஷால் கடிதத்தில் தெரிவித்துள்ளார். நடிகர் சங்க செயற்குழு கூட்டம், இம்மாதம், 28ம் தேதி நடக்கிறது. இக்கூட்டத்தில், விஷாலின் விளக்க கடிதம் குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்பட உள்ளது என, நடிகர் சங்க வட்டாரங்கள் தெரிவித்தன.