ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இந்திய திரை உலகிற்கு, அதிகமான நடிகைகளை வாரி, வழங்கியது, கேரளா தான். இந்த விஷயத்தில், கேரளா, இன்னும் தன் கலைச் சேவையை நிறுத்தவில்லை. மலையாள தேசத்திலிருந்து, தேவதைகள், தொடர்ந்து, படையெடுத்துக் கொண்டிருக்கின்றனர். இதில் லேட்டஸ்ட் வரவு, அவந்திகா மோகன். தற்போது, சில மலையாள திரைப்படங்களில் நடித்து வரும், அவந்திகா மீது, கோலிவுட் இயக்குனர்களின் கவனம் திரும்பியதை அடுத்து, ஒரு தமிழ் படத்தில் நடிப்பதற்காக, ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனால், கோலிவுட் ரசிகர்களுக்கு, விரைவில் அவந்திகாவின் தரிசனம் கிடைக்கவுள்ளது.
"கேரளா, என் சொந்த மாநிலமாக இருந்தாலும், பிறந்து, வளர்ந்தது எல்லாம், துபாயில் தான். என் தாய்மொழி மலையாளம் என்பதால், மலையாள படங்களில் மட்டுமே நடிக்க முடிவு செய்திருந்தேன். நல்ல ரோல் கிடைத்ததால், தமிழில் நடிக்க சம்மதித்தேன். தமிழில் நடிப்பது, நல்ல அனுபவத்தை தருகிறது. ரொம்பவும் சந்தோஷமாகவும் இருக்கிறது என்கிறார், அவந்திகா.