‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
இந்திய திரை உலகிற்கு, அதிகமான நடிகைகளை வாரி, வழங்கியது, கேரளா தான். இந்த விஷயத்தில், கேரளா, இன்னும் தன் கலைச் சேவையை நிறுத்தவில்லை. மலையாள தேசத்திலிருந்து, தேவதைகள், தொடர்ந்து, படையெடுத்துக் கொண்டிருக்கின்றனர். இதில் லேட்டஸ்ட் வரவு, அவந்திகா மோகன். தற்போது, சில மலையாள திரைப்படங்களில் நடித்து வரும், அவந்திகா மீது, கோலிவுட் இயக்குனர்களின் கவனம் திரும்பியதை அடுத்து, ஒரு தமிழ் படத்தில் நடிப்பதற்காக, ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனால், கோலிவுட் ரசிகர்களுக்கு, விரைவில் அவந்திகாவின் தரிசனம் கிடைக்கவுள்ளது.
"கேரளா, என் சொந்த மாநிலமாக இருந்தாலும், பிறந்து, வளர்ந்தது எல்லாம், துபாயில் தான். என் தாய்மொழி மலையாளம் என்பதால், மலையாள படங்களில் மட்டுமே நடிக்க முடிவு செய்திருந்தேன். நல்ல ரோல் கிடைத்ததால், தமிழில் நடிக்க சம்மதித்தேன். தமிழில் நடிப்பது, நல்ல அனுபவத்தை தருகிறது. ரொம்பவும் சந்தோஷமாகவும் இருக்கிறது என்கிறார், அவந்திகா.