600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
தென்கொரியாவில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவுக்கு சீனுராமசாமியின், நீர்ப்பறவை படம் தேர்வாகியுள்ளது. கூடல்நகர், தென்மேற்கு பருக்காற்று போன்ற படங்களை இயக்கிய டைரக்டர் சீனுராமசாமி, சமீபத்தில் இயக்கி வெளிவந்த படம் நீர்ப்பறவை. விஷ்ணு, சுனைனா, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இப்படம் ஒரு அழகான காதல் கதையுடன், இலங்கை கடற்படையிரனால் தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுவதையும் சொல்லியிருந்தார் டைரக்டர் சீனு ராமசாமி. வசூல் ரீதியாக சாதனை படைக்காவிட்டாலும் அனைவரும் பாராட்டும்படியாக இப்படம் அமைந்தது.
இந்நிலையில் இப்படம் தென்கொரிய திரைப்பட விழாவுக்கு தேர்வாகியுள்ளது. தென்கொரியாவில் ஏப்ரல் 25ம் தேதி முதல் மே 3ம் தேதி வரை ஜியோன்ஜூ திரைப்பட விழா நடைபெற இருக்கிறது. இதில் நீர்ப்பறவை படம் திரையிடப்பட இருக்கிறது. இதுகுறித்து இவ்விழாவுக்கான அதிகாரி நிரூபமா சந்தோஷ் கூறியிருப்பதாவது, இந்தி அல்லாத பிறமொழி படங்களுக்கான பட்டியலில் சீனுராமசாமியின் நீர்ப்பறவை படம் தேர்வாகியுள்ளது என்று கூறியுள்ளார்.
தென்கொரிய படவிழாவில் நீர்ப்பறவை படம் தேர்வாகி இருப்பது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம் என்று கூறியுள்ளார்.