ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சின்ன குழந்தையாக இருந்தபோதில் இருந்தே சினிமாவில் நடிக்கிறார் சிம்பு. அதனால்தானோ என்னவோ அவருக்கு யாரும் அட்வைஸ் செய்ய முடியாது. அப்படியே செய்தாலும் அதை காது கொடுத்தே கேட்க மாட்டார். எனக்குத்தெரியாத சினிமாவா? நான் பாக்காதா நடிப்பா? என்பது போல் எக்கச்சக்கமாக பேசுவார். இதனால் அவரது அபிமானிகள்கூட அவருக்கு நல்லதை சொல்ல நினைப்பதில்லை. எதற்கு வம்பு என்று வாய்மூடி இருந்து விடுகிறார்கள். இந்த விசயத்தில் சிம்புவை வைத்து படம் பண்ணும் படாதிபதிகளின் நிலையும் அப்படித்தான்.
குறிப்பாக, போடா போடி படத்துக்கு முன்பே, வேட்டை மன்னன், வாலு படங்களில் நடித்து வந்தார் சிம்பு. திடீரென்று அந்த படங்களை கிடப்பில் போட்டு விட்டு போடா போடியை முடித்து வெளியிட்டார். அதையடுத்து வாலு வெளியிடப்போவதாக சொல்லி படப்பிடிப்பை தொடங்கியவர், இப்போது வேட்டைமன்னன் படப்பிடிப்பை தொடங்கியிருக்கிறார். இதனால் அடுத்து சிம்புவின் நடிப்பில் வெளியாகப்போவது வாலுவா? இல்லை வேட்டைமன்னனா? என்பது குழப்பமாகியிருக்கிறது.