விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் |
களவாணி புகழ் ஓவியாவை கலகலப்பு, சில்லுன்னு ஒரு சந்திப்பு வரை குத்தகைக்கு எடுத்து வைத்திருந்தார் விமல். ஆனால் ஆளாலுக்கு அவர்களைப்பற்றியே கிசுகிசுத்துக் கொண்டிருந்ததால், எதற்கு வம்பு என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பே தனது பாசறையில் இருந்தே ஓவியாவை கழட்டிவிட்டார் விமல். அதோடு, தன்னை சந்திக்கும் இயக்குனர்களிடம் ஓவியா புராணம் பாடி, அவருக்கு சிபாரிசு செய்வதையும் நிறுத்தினார். இதன்காரணமாக, கோடம்பாக்கத்தில் பிழைப்பு இல்லாமல் இப்போது கன்னட சினிமாவில் தஞ்சமடைந்திருக்கிறார் நடிகை.
இந்த நிலையில், கேடி பில்லா கில்லாடி ரங்காவில் தனக்கு ஜோடியாக நடித்த பிந்துமாதவியை இப்போது தனது பாசறை நடிகையாக்கி விட்டதாக விமலைப்பற்றி இன்னொரு செய்தி கோலிவுட்டில் கசிந்து கொண்டிருக்கிறது. அதன்காரணமாகத்தான் அடுத்தபடியாக எழில் இயக்கத்தில் தான் நடிக்கும் தேசிங்கு ராஜா படத்திலும் அவரை தனக்கு ஜோடியாக்கிவிட்டார் என்கிறார்கள். ஆனால் இந்த சேதியறிந்து மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க கோபத்தை வெளிப்படுத்துகிறார் பிந்துமாதவி. விமல் எனக்கு எதற்காக சிபாரிசு செய்யப்போகிறார். அவர் என்ன எனக்கு மேனேஜரா என்கிறார். அதோடு, நடிகைகளை எந்தவொரு இயக்குனரோ, படாதிபதியோ ஹீரோவை கேட்டெல்லாம் ஒப்பந்தம் செய்வதில்லை. அந்தக்காலமெல்லாம் மலையேறி விட்டது. இப்போதெல்லாம் கதைக்கு எந்த நடிகை பொருத்தமாக இருப்பாரோ அவரைத்தான் நடிக்க வைக்கிறார்கள். அப்படித்தான் எனக்கும் வாய்ப்பு கிடைத்து வருகிறது என்று மூச்சு விடாமல் பேசுகிறார் பிந்துமாதவி.