புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ |
சித்திரம் பேசுதடி, அஞ்சாதே படங்களை இயக்கி வந்த நேரம், நந்தலாலா என்ற படத்தில் தானே நாயகனாகவும் நடித்தார் மிஷ்கின். அந்த படம் பெரிய வெற்றி இல்லை என்றபோதும், அவரது நடிப்புக்கு நல்ல பெயர் கிடைத்தது. இருப்பினும் தொடர்ந்து அவர் நடிக்கவில்லை. இந்த நிலையில், ஜீவாவைக்கொண்டு இயக்கிய முகமூடி படத்துக்குப்பிறகு இப்போது சொந்த பட நிறுவனம் தொடங்கியிருக்கும் அவர், அந்த படத்தில் நடிக்க சில நடிகர்களிடம் கால்சீட் கேட்டுப்பார்த்தார். ஆனால் அவர்கள் செவிசாய்க்கவில்லை. அதையடுத்து மார்க்கெட் இல்லாத நடிகர்களை வைத்து இயக்கலாமா? எனறு ஆலோசித்து வந்தவர் தற்போது திடுதிப்பென்று அந்த முடிவை திருத்தம் செய்து விட்டார்.
அதாவது, திங்களன்று படத்திற்கான தலைப்பு ஓநாயும் ஆட்டுக்குட்டியும் என்று வெளியிட்ட அவர், நேற்று படத்தின் இசையமைப்பாளர் இளையராஜா என்பதை அறிவித்தார். அதேவேகத்தில் அப்படத்தில் நானே ஹீரோவாக நடிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார். இப்படம் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த அந்நியன் போன்ற அதிரடி படமாம். அந்நியன், அம்பி என்ற இரண்டு விதமான கெட்டப்பைத்தான், ஓநாயும், ஆட்டுக்குட்டியும் என்று இப்படி தலைப்பிட்டுள்ளாராம் மிஷ்கின்.