இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
"தப்புதாளங்கள்" படத்தில் பிரபலமான சுந்தர், "வைதேகி காத்திருந்தாள்" படத்தில் பிரபலமான பிரமிளா ஆகியோரின் மகள்தான் மேக்னா. "கிருஷ்ணலீலை" படத்தில் அறிமுகமானார். அந்தப் படம் இதுவரை வெளிவரவில்லை. அதன் பிறகு "காதல் சொல்ல வந்தேன்" படத்தில் நடித்தார். அதுவும் சரியாக ஓடவில்லை. அதனால் தமிழ் சரிப்பட்டு வராது என்று தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களில் சீரியசாக நடிக்க ஆரம்பித்தார். என்ன இருந்தாலும் அப்பாவும், அம்மாவும் புகழ்பெற்ற தமிழ் சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்காமல் விடக்கூடாது என்று உறுதி எடுத்தார். அதன்பலனாக தற்போது ஜெயம்ரவி நடிக்க சமுத்திரகனி இயக்கும் "நிமிர்ந்து நில்" படத்தில் நடித்து வருகிறார். பி.வாசு மகன் ஷக்தியுடன் நடித்த "கள்ளச்சிரிப்பழகா" ரிலீசாக வேண்டியது உள்ளது.
தமிழ் சினிமாவில் தான் வெற்றி பெற முடியாமல் போனதற்கு காரணம் என்ன என்று மூளையை கசக்கி யோசித்தவருக்கு ஒன்று புரிந்தது. அது தன்னை மற்றவர்களுடன் ஒப்பிட்டுக் கொண்டது. இவரை சிலர் ஒரு சாயலில் நயன்தாரா மாதிரி இருக்கீங்க, என்றும் இன்னொரு -குரூப் அசின் மாதிரி இருக்கீங்க என்ற ஐஸ் வைக்க அதை அப்படியே நம்பியதுதான் இதற்கு காரணம் என்று முடிவு செய்து, இனி என்னை யாரோடும் ஒப்பிடாதீங்க என்று ஸ்டேட்மெண்ட் விட்டிருக்கிறார்.
அவர் கூறியிருப்பதாவது: நான் யாருடைய சாயலில் தெரிந்தாலும் அது பார்ப்பவர்களின் பார்வையை பொருத்தது. நான் மேக்னாதான். தயவுசெய்து மற்ற ஹீரோயின்களுடன் என்னை ஒப்பிடாதீங்க. நான் நடிக்கும் படங்களில் என் அழகையும், நடிப்பையும் மேக்னாவாக பார்த்து விமர்சியுங்கள். என்று கூறியிருக்கிறார்.