பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
டில்லி மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான விவகாரம், சமுதாயத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, திரைப்படங்களில், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நடப்பது போன்ற காட்சிகளுக்கு, கத்திரி போட, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்திடமிருந்து, தணிக்கை வாரியத்துக்கு க்ரீன் சிக்னல் கிடைத்துள்ளதாம். இதனால், இனிமேல், பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவது, அறைவது போன்ற காட்சிகள் அனுமதிக்கப்படாது என்கிறது, தணிக்கை வட்டாரம். கணவன், மனைவியை அறைவது போன்ற காட்சிகளாக இருந்தாலும், அதற்கும் கத்திரி நிச்சயமாம். இதனால், கிலியடித்துப் போய் இருக்கின்றனர், திரையுலகினர்.