நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… |
'துணிவு' படத்திற்குப் பிறகு அஜித் நடிக்கும் அவரது 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்கப் போவதாக கடந்த வருடமே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் அஜித் முதல் முறையாக நடிக்கும் இப்படத்திற்காக அவருக்கு முந்தைய சம்பளத்தை விட அதிகமான சம்பளம் பேசப்பட்டது என்றும் சொன்னார்கள்.
'துணிவு' படம் வந்து பெரும் வெற்றி பெற்ற பிறகு அஜித்தின் எண்ணத்தில் மாறுதல் ஏற்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். அடுத்தும் ஆக்ஷன் படமாகக் கொடுப்பதுதான் ரசிகர்களைத் திருப்திப்படுத்தும் என்று யோசிக்கிறாராம். விக்னேஷ் சிவன் இதற்கு முன்பு இயக்கிய படங்கள் நகைச்சுவை கலந்த ரொமான்டிக் படங்களாகத்தான் இருக்கும். அவர் ஆக்ஷன் படங்களை இயக்கியது கிடையாது.
எனவே, அதிரடியான ஆக்ஷன் படத்தை கொடுக்கக் கூடிய இயக்குனரின் படத்தில் நடிக்கலாம் என்பதுதான் அந்த முடிவாம். அஜித் 62க்கு வேறு ஒரு இயக்குனர், அதற்குப் பிறகு வேண்டுமானால் அஜித் 63க்கு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.
தற்போது அஜித், விக்னேஷ் சிவன் உள்ளிட்டோர் லண்டனில் லைக்கா குழுமத் தலைவர் சுபாஷ்கரனுடன் பேசி வருகிறார்களாம். ஓரிரு நாட்களில் யார் யார் எந்தப் படம் என்பது குறித்து அறிவிப்பு வரலாம் என்பதுதான் லேட்டஸ்ட் தகவல்.