'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஒத்த செருப்பு சைஸ்-7, இரவின் நிழல் படங்களை தொடர்ந்து இந்த ஆண்டு மூன்று படங்களை இயக்கப் போவதாக அறிவித்துள்ள பார்த்திபன், அந்த படங்களின் தலைப்பையும் சமீபத்தில் டுவிட்டரில் அறிவித்திருந்தார். அதோடு சில தினங்களுக்கு முன்பு சென்னை புத்தகக் கண்காட்சியில் சிறைவாசிகளுக்காக புத்தகங்களை மடிப்பிச்சை எடுத்தார்.
இந்த நிலையில் பார்த்திபன் இறந்து விட்டதாக ஒரு யூடியூப் சேனலில் செய்தி வெளியானதை அடுத்து அந்த செய்திக்கு நறுக்கென்று ஒரு பதிலடி கொடுத்துள்ளார் பார்த்திபன். அந்த பதிவில், 'நொடியில் மரணம் அடைவதும் மறுபடியும் அடுத்ததாய் உயிர்த்தெழுவதும் இயற்கை. நடிகன் பற்றிய செய்திகள் இப்படி ஊர்வலம் ஆவதின் காரணம் புரியவில்லை. நெகட்டிவிட்டிஐ பரப்ப இதுபோல் சில நண்பர்கள் இருக்கிறார்கள். மகிழ்ச்சியை மனதில் நிரப்புவோம். மக்களுக்கு பரப்புவோம்' என ஒரு பதிலடி கொடுத்திருக்கிறார் பார்த்திபன்.