டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
இளையராஜாவின் அன்பு கட்டளைக்கு ஏற்ப அரைமணி நேரத்தில் பாட்டு பாடி கொடுத்து அசத்தி இருக்கிறார் நடிகர் கமல்ஹாசன். விஸ்வரூபம் பட பிரச்னையில் இருந்து மீண்டு படத்தின் வசூலால் திருப்தி அடைந்திருக்கும் கமல், அதே வேகத்தோடு விஸ்வரூபம் பார்ட்-2-வுக்கான ஆயத்த வேலைகளில் பிஸியாக இருக்கிறார். இந்நிலையில் பாலிவுட் இயக்குனர் பாவ்னா தல்வார், பங்கஜ் கபூரை வைத்து ஹேப்பி என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து வருகிறார். மறைந்த நகைச்சுவை கலைஞர் சார்லி சாப்ளினை கவுரவிக்கும் வகையில் இப்படத்தை இயக்குகிறார் பாவ்னா தல்வார்.
ஹேப்பி படத்தின் பாடல் பதிவை சென்னையில் நடத்தி வருகிறார் இளையராஜா. இப்படத்தின் பாடல் ஒன்றை பாட யாரை அழைப்பது என்று யோசித்த இளையராஜா, உடனடியாக தனது உதவியாளரிடம் கமலை வரச் சொல் என்று கூறியிருக்கிறார். அவரும் கமலுக்கு போன் செய்து விஷயத்தை சொல்லி இருக்கிறார். இளையராஜாவின் அழைப்பை ஏற்று ஒரு மணி நேரத்தில் ஸ்டுடியோவுக்கு வந்த கமல் அரைமணி நேரத்திலேயே பாட்டு பாடி கொடுத்துவிட்டார். பாடலும் உடனடியாக பதிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து கமல் கூறுகையில், சிவாஜி, பாலசந்தர், இளையராஜா போன்றவர்கள் என்னுடைய முன்மாதிரிகள், அவர்கள் எப்போது அழைத்தாலும் உடனே ஓடோடி வருவேன் என்று கூறியுள்ளார்.