ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தெலுங்கில் இதுவரை எட்டு படங்கள் இயக்கி அத்தனை படத்தையும் ஹிட்டாக்கியர் எஸ்.எஸ்.ராஜமவுலி. இது தெலுங்கில் வேறு எந்த இயக்குனரும் செய்திராத சாதனை. மாவீரன், நான் ஈ படங்களின் மூலம் தமிழுக்கும் தெரிந்த முகமானார். அடுத்து அவர் ரஜினியை இயக்கப்போகிறார், இந்தியில் ஆமீர்கானை இயக்கப்போகிறார். தமிழில் கமலை இயக்கப்போகிறார் என ஏகப்பட்ட செய்திகள், வதந்திகள் வந்து போய்விட்டன. கடைசியாக பிரசாந்த்தை இயக்கப்போகிறார் என்ற வதந்தியும் பரவிச் சென்றது.
ராஜமவுலி அடுத்து இயக்கப்போவது தெலுங்கில் ஒரு சரித்திரப் படத்தை. படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. ராஜமவுலி இயக்கிய மாவீரன் ஒரு கற்பனை சரித்திரகதை. அதிலும் பாதி கதைதான் சரித்திரம். இப்போது அவர் இயக்கப்போவது ஆந்திராவில் நடந்த ஒரு வீர சரித்திரக் கதை. அதில் கொஞ்சம் கற்பனை கலந்து இயக்குகிறார். பிரபாசும், ராணாவும்தான் ஹீரோ. இருவரும் வெவ்வேறு நாட்டு இளவரசர்கள். இவர்கள் அனுஷ்கா என்ற இன்னொரு நாட்டு இளவரசிக்காக நடத்தும் ஆட்டங்கள்தான் கதை.
படத்துக்காக வியட்நாமில் இருந்து வரவழைக்கப்பட்டிருக்கும் சண்டை பயிற்சியாளர்கள் பிரபாஸ், ராணா, அனுஷ்கா மூவருக்கும் குதிரையேற்றமும், வாள் சண்டையும் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். ஹீரோக்கள் இருவரையும் விட அனுஷ்காதான் இதில் பாஸ்ட் காரணம் அவர் ஏற்கெனவே ருத்தரம்மாதேவி படத்துக்காக இதனை கற்றுத் தேர்ந்துவிட்டார். ராஜமவுலி படத்துக்கான லொக்கேஷன்களை வேட்டையாடிக் கொண்டிருக்கிறார்.