பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
வன யுத்தம் படத்தை இயக்கியதற்காக கர்நாடகாவில் என்னை மிரட்டுகிறார்கள், என்று டைரக்டர் ரமேஷ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், ஐகோர்ட் தீர்ப்புபடி பிப்ரவரி 14ம்தேதி வனயுத்தம் படத்தை ரிலீஸ் செய்தோம். சுப்ரீம் கோர்ட் தீர்ப்புபடி முத்துலட்சுமிக்கு ரூ.25 லட்சம் கொடுக்க சம்மதம் தெரிவித்துள்ளேன். ஒரு படைப்பாளியாக வீரப்பன் கதையில் நடந்த உண்மைகளை படத்தில் சொல்லியிருக்கிறேன். ஆனால் கர்நாடகாவில் எனக்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கும், தமிழக முதல்வருக்கும், தமிழக போலீசாருக்கும் ஆதரவாக படம் எடுத்திருப்பதாகச் சொல்லி சில கன்னட அமைப்புகள் பிரச்னை செய்கிறார்கள். இதற்காக பெங்களூரு போலீஸ் கமிஷனரிடம் பாதுகாப்பு கேட்க முடிவு செய்துள்ளேன், என்று கூறியுள்ளார்.