அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
விஜய் நடித்துள்ள வாரிசு படம் வருகிற பொங்கல் தினத்தில் திரைக்கு வரும் நிலையில் தற்போது பெரிய அளவில் அப்படக்குழு பிரமோசன்களை முடுக்கி விட்டுள்ளனர். ஏற்கனவே கடந்த நவம்பர் மாதம் பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்தார் விஜய். அப்போது அவர்களுக்கு பிரியாணி விருந்து அளிக்கப்பட்டது.
இந்தநிலையில் இன்றைய தினம் இரண்டாம் கட்டமாக மீண்டும் பனையூர் அலுவலகத்தில் ரசிகர்களை சந்தித்துள்ளார் விஜய். இந்த சந்திப்பில் வாரிசு படத்தை வெளிமாவட்டங்களில் மக்களிடம் கொண்டு சேர்க்க என்னென்ன விளம்பர யுக்திகளை செயல்படுத்த வேண்டும் என்பது குறித்தும் முக்கிய நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சந்திப்புக்கு பின் வழக்கம்போல் பிரியாணி விருந்தும் தடபுடலாக நடந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக ரசிகர்களை சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டதால் இப்படி அடுத்தடுத்து ரசிகர் மன்ற நிர்வாகிகளை விஜய் சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. முக்கியமாக அடையாள அட்டையுள்ள விஜய் ரசிகர் மன்றத்தினரே இந்த சந்திப்பில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.