நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
ரஜினி, கமல் என்ற மெகா ஸ்டார்கள் கொடி கட்டி பறந்த சமயத்தில்,"சின்னப்பூவே மெல்லப் பேசு என சத்தமில்லாமல் இளசுகளின் "யூத்தாக அறிமுகமானவர் நடிகர் ராம்கி. "செந்தூரப்பூவே மூலம், ஆக்ஷனிலும் சிறகை விரித்தார். "இணைந்த கைகள் மூலம் ஆக்ஷன் மற்றும் காமெடியிலும் ஜொலித்தார். "ஆஹா என்ன பொருத்தம், என காமெடி படங்களிலும், பாளையத்தம்மன், படை வீட்டம்மன் பக்தி படங்களிலும் தலைகாட்டினார். தொடர்ந்து 65க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர், 2007ம் ஆண்டு "குற்றப்பத்திரிகை படத்தில் நடித்ததுடன், சினிமாவை விட்டே ஒதுங்கி இருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு, வெங்கட் பிரபு இயக்கத்தில், "பிரியாணி, பத்மராஜன் இயக்கத்தில் "மாசாணி படம் மூலம், ரீ... என்ட்ரி ஆகிறார் ராம்கி. அன்று பார்த்தது போல், அதே இளமையுடன் இன்றும் இருப்பது, ஆச்சரியம். வயல்வெளி வாசத்தில், வாலிப மிடுக்கோடு படப்பிடிப்பில் நடித்தவரை, பேட்டிக்காக பேச்சு கொடுத்தோம்.
""மதுரை கோ.புதூர் எனது சொந்த ஊர். படித்தது அமெரிக்கன் கல்லூரி. படிக்கும் காலத்தில், படித்ததை விட "கட் அடித்தது தான் அதிகம். மதுரை குசும்பு அத்துபிடி. அப்போதே ஒட்டி கொண்டு விட்டது. சினிமா நேசத்தால், வீட்டை விட்டு விரட்டி விடப்பட்டவன். சென்னை சென்று, பிலிம் டெக்னாலஜி படித்தேன். ஆபாவாணனும் நானும் "கிளாஸ்மேட். ஏழு ஆண்டுகள் உதவி இயக்குனர். அதன்பிறகு மெல்ல சினிமா வாசம். இதுவரை தமிழில் 65, ஆந்திராவில் 15 படங்கள் நடித்துள்ளேன். இந்தியாவிலேயே "டி.டி.எஸ். மூலம் எடுக்கப்பட்ட கருப்பு ரோஜா படம் நான் நடித்தது தான், என்றவரிடம் கேட்ட கேள்விகளுக்கு அளித்த "பட்பட் பதில்கள்..
* உங்களுக்கு காமெடி நல்லா வருதே?
மதுரைக்காரங்களுக்கு சொல்லியா கொடுக்கணும், காமெடியனாக நடிக்க... அட போங்கப்பு...
* யாருடைய காமெடி பிடிக்கும்?
எல்லாரையும் பிடிக்கும். வடிவேலுவின், "ஆணியே புடுங்க வேண்டாம், காமெடியை, நானே இப்ப "யூஸ் பண்ணிட்டு வர்றேன்.
* அன்று இருந்த நகைச்சுவை இன்று இல்லையே? ஏன்?
முன்பு காமெடிக்கு தனி ஆட்கள இருந்தனர். இன்று, அவர்களே தயாரிப்பாளர்கள், டெக்னீசியனாக மாறி வருகின்றனர். வசனம் எழுதுபவர்கள் பற்றாக்குறையும் ஒரு காரணம்.
* காதல் படங்கள், ஆக்ஷன் படங்கள், உங்களுக்கு வெற்றியை தந்தது எது?
சின்ன பூவே மெல்லபேசு 150 நாள், செந்தூரப்பூவே லவ் பிளஸ் ஆக்ஷன். தங்கச்சி என்ற படம் ஆக்ஷன். மருதுபாண்டி ஆக்ஷன் படம். அதிக அளவு வெற்றியை தந்தது ஆக்ஷன் படங்கள் தான். ஆனால், எனக்கு பிடித்தது காமெடி படங்கள்.
* உங்களை கவர்ந்த இயக்குனர்?
பாரதிராஜா. அவர் படத்தில் நடித்ததில்லை. அவர் திறந்த கதவு மூலம், சினிமாவில் ஜெயித்தவர்கள் ஏராளம்.
* தீவிர ஐயப்ப பக்தராமே நீங்கள்?
உண்மைதான். சிறுவயது முதலே, ஐயப்பனிடம், ஈடுபாடு. தற்போது 365 நாளும் மாலை போட்டு வருகிறேன்.
* உங்களின் இளமையின் ரகசியம்?
கடந்த 15 ஆண்டுக்கும் மேலாக, சைவ உணவுகளை மட்டுமே சாப்பிடுகிறேன். சிகரெட் கிடையாது. தியானம். மனது இளமையாக இருக்க வேண்டும். மனம் குழப்பமாக இருந்தால் முகம் காட்டி கொடுத்துவிடும்.
* ரொம்ப நாளா சினிமாவில் இருந்து ஒதுங்கிவிட்டீர்களே. ஏன்? இடைவெளியில் எங்கு சென்றீர்கள்?
இலங்கையில் "மெகா சீரியல் எடுக்க சென்றதால், தொடர்ந்து அங்கேயே இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. போர் வந்ததால், இந்தியாவில், உள்ளவர்கள் அங்கு இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதன்பிறகு தமிழகம் வந்தேன்.
* நீங்கள் நடிக்கும் "மாசாணி பற்றி?
மாசாணி மூலம் மீண்டும் ஒரு சந்திரமுகியை பார்க்கலாம்.
* மீண்டும் "இணைந்த கைகள் வெளிவருமா?
ஆபாவாணன், அதற்கான முயற்சியில் ஈடுபடுவார் என நம்புகிறேன்.