தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி |
மார்க்கெட்டில் இருக்கும் நடிகைகளைப்பொறுத்தவரை காமெடியன்களுடன் டூயட் பாடினாலே அவர்களது மார்க்கெட் சரிந்து விடும் என்றொரு செண்டிமென்ட் கோடம்பாக்கத்தில் நிலவு வருகிறது. உதாரணத்துக்கு இந்திரலோகத்தில் நா.அழகப்பன் படத்தில் வடிவேலுவுடன் ஒரு பாட்டுக்கு நடனமாடிய ஸ்ரேயாவை அதன்பிறகு எந்த முன்னணி ஹீரோக்களும் தங்களுடன் நடனமாடி அனுமதிக்கவில்லை. இதனால் ஒரே பாட்டோடு அவரது மார்க்கெட்டே டவுன் ஆனது. அதனால் அதன்பிறகு காமெடி நடிகர்களுக்கு ஜோடி என்றாலே முன்னணி நடிகைகள் அலறிக்கொண்டு ஓடுகிறார்கள்.
இந்த நிலையில், வளர்ந்து வரும் காமெடியனான பவர் ஸ்டாருடன் தான் வினய்க்கு ஜோடியாக நடித்து வரும் ஒன்பதுல குரு படத்தில் ஒரு பாட்டுக்கு நடனமாடியிருக்கிறார் லட்சுமிராய். முதலில் இதுபற்றி படத்தின் இயக்குனர் செல்வகுமார் அவரிடம் கேட்டபோது, பவர்ஸ்டாருடன் போய் எப்படி ஆடுவது என்று முகம் சுழித்தாராம். அதற்கு, இந்த படத்துக்கு வியாபாரமே அவரை வைத்துதான். வினய்யை வைத்து இல்லை. அதனால் அவருடன் நீங்கள் ஆடுவது போன்று இப்போது கதையை திருத்தம் செய்திருக்கிறேன். அந்த அளவுக்கு பவர்ஸ்டார் இப்போது முக்கியமான நடிகராகி விட்டார். அதனால் அவருடன் ஆடியே ஆக வேண்டும் என்று அடித்து சொல்லி விட்டாராம். அதன்காரணமாக, மனதை இறுக்கமாக வைத்துக்கொண்டு முகத்தில் சிரிப்பை வெளிப்படுத்தியபடி பவருடன் பளீர் ஆட்டம் போட்டிருக்கிறார் லட்சுமிராய்.