கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
முன்னணி நடிகர்களைப்பொறுத்தவரை சண்டை காட்சிகள் மற்றும் உயரமான பகுதியில் இருந்து குதிப்பது போன்ற காட்சிகளுக்கு பெரும்பாலும் டூப்பைத்தான் யூஸ் பண்ணி வருகிறார்கள். இதில் ஆக்சன் நடிகர்கள் தங்களுக்கென்று பிரத்யேகமாக டூப் நடிகர்களை எங்கு சென்றாலும் கூட்டிக்கொண்டே திரிகிறார்கள். அவர்கள் தங்களைப்பொறுத்தவரை முக்கியமானவர்கள் என்று கருதும் நடிகர்கள், கம்பெனி சர்ர்பில் அவர்களுக்கு ஒரு சம்பளம் சென்றால், தாங்களும் தனிப்பட்ட முறையில் அவ்வப்போது பெரிய தொகை கொடுத்து கவனித்து விடுவார்கள். இதனால் அந்த நடிகர்களுக்காக உயிரையும் பணயம் வைக்கிற அளவுக்கு டூப் நடிகர்கள் தயாராகி விடுகிறார்கள்.
ஆனால் இந்த விசயத்தில் நடிகைகளுக்கு பெரிய அளவில் ரிஸ்க் இல்லைதான். என்றாலும், அனுஷ்கா போன்று அதிரடி படங்களில் நடிப்பவர்களுக்கு டூப் தேவைப்படுகிறது. சமீபத்தில் ஒரு படத்தில் ஹன்சிகாவையும வில்லன் கற்பழிக்க துரத்துவது போன்ற காட்சியில் டூப் நடிகையை யூஸ் பண்ணிக்கொள்ள கேட்டுக்கொண்டாராம் அப்படத்தின் இயக்குனர். அதற்கு, கட்டிப்பிடிப்பது, முத்தம் கொடுப்பது போன்ற காட்சிகளில் எல்லாம் நான் நடித்து விட்டு, வில்லன் துரத்துவது போன்ற கடினமான காட்சிகளுக்கு டூப் பயன்படுத்துதில் எனக்கு உடன்பாடில்லை. காரணம், நான் ஒரிஜினல் நடிகை. ஜெராக்ஸ் நடிகையாக இருப்பதில் விருப்பமில்லை என்று உறுதியாக சொல்லி, காட்டுப்பகுதியில் நடந்த அந்த காட்சியில் நடித்துக்கொடுத்திருக்கிறார் ஹன்சிகா.