தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தற்போது பெயரிடப்படாத விஷ்ணுவர்த்தனின் படத்தில் நடித்து வரும் அஜீத், அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும், அந்தப் படத்திற்கு "ரெட்டைதலை" என்று பெயர் வைத்திருப்பதாகவும், அஜீத் இரண்டு வேடங்களில் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. இதனை ஏ.ஆர்.முருகதாஸ் மறுத்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது: நானும் அந்த செய்திகளை படித்தேன். சரி நல்ல விஷயம்தானே என்று பதில் ஏதும் சொல்லவில்லை. ஆனால் அவை எல்லாமே யூகத்தின் அடிப்படையிலான செய்திகள்தானே தவிர உண்மையில்லை. அஜீத்துடன் ஒரு படம் பண்ண வேண்டும் என்ற ஆசை எனக்கு உண்டு. அவருக்கும் உண்டு. ஆனால் அதற்கான நேரம் இன்னும் வரவில்லை. வரும்போது சேர்ந்து பணியாற்றுவோம். நான் இப்போது "துப்பாக்கி" இந்தி ரீமேக்கில் பிசியாக இருக்கிறேன். அக்ஷய்குமார், சோனாக்ஷி சின்ஹா நடிக்கிறார்கள். இதற்கே எனக்கு ஒரு வருடம் ஆகிவிடும், பொதுவாக நான் பெரிய பட்ஜெட்டில் ஆக்ஷன் படங்கள்தான் இயக்குகிறேன் என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. அதை மாற்றும் வகையில் சிறிய பட்ஜெட்டில் புதுமுகங்களை வைத்து ஒரு காதல் படம் எடுக்கும் எண்ணமும் இருக்கிறது. கமல் சாரை வைத்து உலக தரத்தில் ஒரு படத்தை இயக்க வேண்டும் என்பது வாழ்நாள் கனவு. என்றார்.