விஷால் மீது நடவடிக்கை இல்லை! - நடிகர் சங்கம் | மாமனாருக்கு பதில் மருமகனை இயக்குகிறார் கே.வி.ஆனந்த்!! | சூதாட்ட சர்ச்சை; நடிகைகள் பக்கம் திரும்பும் போலீஸ்; கலக்கத்தில் தமிழ் நடிகைகள் | தாய்லாந்தில் படமாகும் விஸ்வரூபம்-2!! | அரசியலில் கலக்க வருகிறார் ப்ரீத்தி ஜிந்தா! | கொஞ்சம் வயதாகி வருவதால் இரவு நேரங்களில் இசையமைப்பதில்லை-ஏ.ஆர்.ரஹ்மான் | கேன்ஸ் படவிழாக்குழுவினரை கவர்ந்த ஐஸ்வர்யா ராய் மகள்! | ஷாங்காய் விழாவில் கமலின் பேசும் படம்! | சித்தார்த்துடன் மீண்டும் இணைகிறார் சமந்தா! | மரியானின் திகில் அலை இன்னமும் மனசுக்குள்ள அடிச்சிக்கிட்டேயிருக்கு! -சொல்கிறார் தனுஷ் |

தடைகளைத்தாண்டி வெளியாகியிருக்கும் விஸ்வரூபம் படத்தில் பூஜாகுமார் கமலின் மனைவியாக நடித்திருக்க, ஆண்ட்ரியா இன்னொரு கேரக்டரில் வருகிறார். கூடவே கதக் நடனம் இடம்பெற்ற பாடலில் அவருடன் சிறப்பாகவும் ஆடி ஸ்கோர் பண்ணியிருக்கிறார். அதைப்பார்த்து விட்டு, ஆண்ட்ரியாவின் அபிமானிகள் அவரை தொடர்பு கொண்டு உற்சாகப்படுத்தி வருகிறார்களாம். இதனால் எல்லையில்லா சந்தோசத்தில் பறந்து கொண்டிருக்கிறார் ஆண்ட்ரியா.
இதுபற்றி அவர் கூறுகையில், கமல் சார் படத்துக்கு நடிக்க அழைத்ததும் என்ன கேரக்டர் என்றுகூட நான் கேட்கவில்லை. அதோடு படம் முழுக்க வருவது போன்ற கேரக்டராக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. ஏதோ கேரக்டர் தருவார் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் நானே எதிர்பார்க்காத வகையில் நல்லதொரு கதாபாத்திரம் கிடைத்தது. ஹாலிவுட் தரத்தில் உருவான இப்படியொரு படத்தில் நானும் இடம்பெற்றதே பெரிய அதிர்ஷ்டம் என்று சொல்லும் ஆண்ட்ரியா, இந்த ஜென்மத்துக்கு இது போதும். அதுவும் உலக நாயகன் கமல் சாருடன் நடிக்க எத்தனையோ நடிகைகள் தவம் கிடக்க சினிமாவுக்கு வந்து குறுகிய காலத்திலேயே அந்த பாக்கியத்தை நான் பெற்றிருப்பது ரொம்பவே பெருமையான விசயம் என்கிறார்.