ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
ராதாவின் இளைய மகளான துளசி கடல் படத்தில் நடித்து தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் அறிமுகமானார். இந்நிலையில், தற்போது தமிழில் ஜீவாவுக்கு ஜோடியாக யான் படத்தில் நடித்து வருகிறார். ஆனால் இதையடுத்து தெலுங்கு படங்களில் நடிப்பதில்தான் அதிக ஆர்வமாக உள்ளார் அவர். அதனால் தற்போது தாய்குலத்துடன் ஐதராபாத்தில் உள்ள ஒரு ஸ்டார் ஹோட்டலில் முகாமிட்டு அங்கு பிரபல சினிமா கம்பெனிகளுக்கு படையெடுத்து வருகிறார்.
காரணம், பெரும்பாலும், தமிழ், இந்தி சினிமாவை விட தெலுங்கு சினிமாதான் நடிகைகளுக்கு நல்லதொரு அங்கீகாரத்தை கொடுக்கும் என்பது மாஜி நடிகையான ராதாவின் அனுபவமாம். அதனால் முதலில் மகளை ஆந்திராவில் உச்ச நடிகையாக்கி விட வேண்டும் என்று தீவிரம் காட்டி வருகிறார். ஆனால் அவர் சான்ஸ் கேட்டு சென்ற சில கம்பெனிகளில் இன்னமும் துளசி பால்வடியும் முகமாகத்தான் இருக்கிறார். இவரை வைத்து எப்படி கமர்சியல் படம் பண்ண முடியும் என்று தலையை சொறிந்தார்களாம். விளைவு, ஒரு இரண்டு மாதம் டயம் கொடுங்கள் என் மகளை சிறந்த கமர்சியல் குதிரையாக்கிக்காட்டுகிறேன். அதன்பிறகு அவளை அடிச்சிக்க இங்கு ஆளிருக்காது என்று சொடக் போட்டு விட்டு துளசியின் உடல்கட்டு, முகவெட்டை வசீகரப்படுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கிறாராம் ராதா.