ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ராதாவின் இளைய மகளான துளசி கடல் படத்தில் நடித்து தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் அறிமுகமானார். இந்நிலையில், தற்போது தமிழில் ஜீவாவுக்கு ஜோடியாக யான் படத்தில் நடித்து வருகிறார். ஆனால் இதையடுத்து தெலுங்கு படங்களில் நடிப்பதில்தான் அதிக ஆர்வமாக உள்ளார் அவர். அதனால் தற்போது தாய்குலத்துடன் ஐதராபாத்தில் உள்ள ஒரு ஸ்டார் ஹோட்டலில் முகாமிட்டு அங்கு பிரபல சினிமா கம்பெனிகளுக்கு படையெடுத்து வருகிறார்.
காரணம், பெரும்பாலும், தமிழ், இந்தி சினிமாவை விட தெலுங்கு சினிமாதான் நடிகைகளுக்கு நல்லதொரு அங்கீகாரத்தை கொடுக்கும் என்பது மாஜி நடிகையான ராதாவின் அனுபவமாம். அதனால் முதலில் மகளை ஆந்திராவில் உச்ச நடிகையாக்கி விட வேண்டும் என்று தீவிரம் காட்டி வருகிறார். ஆனால் அவர் சான்ஸ் கேட்டு சென்ற சில கம்பெனிகளில் இன்னமும் துளசி பால்வடியும் முகமாகத்தான் இருக்கிறார். இவரை வைத்து எப்படி கமர்சியல் படம் பண்ண முடியும் என்று தலையை சொறிந்தார்களாம். விளைவு, ஒரு இரண்டு மாதம் டயம் கொடுங்கள் என் மகளை சிறந்த கமர்சியல் குதிரையாக்கிக்காட்டுகிறேன். அதன்பிறகு அவளை அடிச்சிக்க இங்கு ஆளிருக்காது என்று சொடக் போட்டு விட்டு துளசியின் உடல்கட்டு, முகவெட்டை வசீகரப்படுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கிறாராம் ராதா.