டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ராதாவின் இளைய மகளான துளசி கடல் படத்தில் நடித்து தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் அறிமுகமானார். இந்நிலையில், தற்போது தமிழில் ஜீவாவுக்கு ஜோடியாக யான் படத்தில் நடித்து வருகிறார். ஆனால் இதையடுத்து தெலுங்கு படங்களில் நடிப்பதில்தான் அதிக ஆர்வமாக உள்ளார் அவர். அதனால் தற்போது தாய்குலத்துடன் ஐதராபாத்தில் உள்ள ஒரு ஸ்டார் ஹோட்டலில் முகாமிட்டு அங்கு பிரபல சினிமா கம்பெனிகளுக்கு படையெடுத்து வருகிறார்.
காரணம், பெரும்பாலும், தமிழ், இந்தி சினிமாவை விட தெலுங்கு சினிமாதான் நடிகைகளுக்கு நல்லதொரு அங்கீகாரத்தை கொடுக்கும் என்பது மாஜி நடிகையான ராதாவின் அனுபவமாம். அதனால் முதலில் மகளை ஆந்திராவில் உச்ச நடிகையாக்கி விட வேண்டும் என்று தீவிரம் காட்டி வருகிறார். ஆனால் அவர் சான்ஸ் கேட்டு சென்ற சில கம்பெனிகளில் இன்னமும் துளசி பால்வடியும் முகமாகத்தான் இருக்கிறார். இவரை வைத்து எப்படி கமர்சியல் படம் பண்ண முடியும் என்று தலையை சொறிந்தார்களாம். விளைவு, ஒரு இரண்டு மாதம் டயம் கொடுங்கள் என் மகளை சிறந்த கமர்சியல் குதிரையாக்கிக்காட்டுகிறேன். அதன்பிறகு அவளை அடிச்சிக்க இங்கு ஆளிருக்காது என்று சொடக் போட்டு விட்டு துளசியின் உடல்கட்டு, முகவெட்டை வசீகரப்படுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கிறாராம் ராதா.