திரையுலக வாழ்க்கையில் கிசுகிசுக்கள் சாதாரண விஷயம்: பிபிஷாபாசு | ஹாலிவுட் படம்இயக்கும் பி.வாசு | பாலா - எஸ்.ரா., மீண்டும் கூட்டணி | "திலோன்ரேஞ்சர் | தமிழில்பேசி பழகலாமேதீபிகாவுக்கு ஷாரூக் அறிவுரை | யாருக்கு கல்யாணமானா எனக்கென்ன? உச்சக்கட்டகோபத்தில் அனுஷ்கா | விஜயுடன் நடனமாடிய ஜி.வி.பிரகாஷ் | மோசடி புகாரில் சிக்கிய கேரள நடிகை ஷாலுமேனன்! | வணக்கம் சென்னை ஆடியோ விழாவில் கருணாநிதி கலந்து கொள்கிறாராம்! | சினிமா வாய்ப்புகளுக்காக அலையவில்லை என்கிறார் சினேகா! |
ராதாவின் இளைய மகளான துளசி கடல் படத்தில் நடித்து தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் அறிமுகமானார். இந்நிலையில், தற்போது தமிழில் ஜீவாவுக்கு ஜோடியாக யான் படத்தில் நடித்து வருகிறார். ஆனால் இதையடுத்து தெலுங்கு படங்களில் நடிப்பதில்தான் அதிக ஆர்வமாக உள்ளார் அவர். அதனால் தற்போது தாய்குலத்துடன் ஐதராபாத்தில் உள்ள ஒரு ஸ்டார் ஹோட்டலில் முகாமிட்டு அங்கு பிரபல சினிமா கம்பெனிகளுக்கு படையெடுத்து வருகிறார்.
காரணம், பெரும்பாலும், தமிழ், இந்தி சினிமாவை விட தெலுங்கு சினிமாதான் நடிகைகளுக்கு நல்லதொரு அங்கீகாரத்தை கொடுக்கும் என்பது மாஜி நடிகையான ராதாவின் அனுபவமாம். அதனால் முதலில் மகளை ஆந்திராவில் உச்ச நடிகையாக்கி விட வேண்டும் என்று தீவிரம் காட்டி வருகிறார். ஆனால் அவர் சான்ஸ் கேட்டு சென்ற சில கம்பெனிகளில் இன்னமும் துளசி பால்வடியும் முகமாகத்தான் இருக்கிறார். இவரை வைத்து எப்படி கமர்சியல் படம் பண்ண முடியும் என்று தலையை சொறிந்தார்களாம். விளைவு, ஒரு இரண்டு மாதம் டயம் கொடுங்கள் என் மகளை சிறந்த கமர்சியல் குதிரையாக்கிக்காட்டுகிறேன். அதன்பிறகு அவளை அடிச்சிக்க இங்கு ஆளிருக்காது என்று சொடக் போட்டு விட்டு துளசியின் உடல்கட்டு, முகவெட்டை வசீகரப்படுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கிறாராம் ராதா.