பெண்களால் முடியாதது எதுவுமில்லை! அண்ணா பல்கலை விழாவில் சூர்யா பேச்சு | கேரள ரசிகர்கள் தள்ளுமுள்ளு! விஜய்யின் கார் கண்ணாடி உடைந்தது!! | இறுதிக்கட்டத்தை நெருங்கிய ஜெயம் ரவியின் ஜீனி! | ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் |
"நீ தானே என் பொன் வசந்தம் படத்துக்கு பின், தமிழில் புதிய படங்கள் இல்லையென்ற போதும், தெலுங்கில் பல படங்களை கைப்பற்றி, பிசியாக நடித்து வருகிறார் சமந்தா. இதற்கிடையில் "பாலிவுட்டிலிருந்து படங்கள் வந்தபோதும், மிதமான கிளாமர் என்ற பாலிசியை கடைபிடித்து வரும் எனக்கு, இந்தி சினிமா சரிபட்டு வராது என்று தவிர்த்து விட்ட சமந்தா, "அடுத்து தமிழ்,தெலுங்கு என, இரண்டு மொழிப் படங்களையும், இரண்டு கண்களாக பாவித்து நடிக்கப்போகிறேன் என்றும் கூறி யுள்ளார். "காரணம், இந்த இரண்டு மொழியிலுமே, என்னை ஒரு நடிகையாக கருதாமல், தங்கள் வீட்டு பிள்ளை போன்றே அன்பு காட்டுகின்றனர். சமந்தா என்ற பெயரை சுருக்கி, சாம் என்றே செல்லப்பெயர் வைத்து அழைக்கின்றனர். அதோடு, எந்த நடிகைகளும் என்னை போட்டியாக நினைக்காமல், சக தோழியாகவே பழகுகின்றனர். என்றென்றும், இந்த அன்புக்கு நன்றி கடன் பட்டுள்ளேன் என்கிறார் சமந்தா.